முக்குலத்தோர்:



முக்குலத்தோர் (தேவர்) முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய முக்குலங்களை உள்ளடக்கியதால் இச்சாதியினர்
முக்குலத்தோர் என்றும் இந்திர குலத்தினர் என்பதால் தேவர் என்றும் குறிக்கப்பெறுவர்.
தேவர் என்பது தென் தமிழ்நாட்டில் வாழும் ஒரு சாதியினரையும் குறிக்கும். கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூன்று சாதியினரும் தேவர் எனும் சாதியின் கீழ் ஒருங்கிணைக்கப்படுகின்றனர். மூன்று சாதியினராக இவர்கள் மூன்று குலத்தவர்களாகக் கொண்டு முக்குலத்தோர் என்றும் குறிப்பிடுவதுண்டு.
தேவர் (முக்குலத்தோர்)
தேவர் சமூகத்தினர் போர்க்குணம் படைத்த வீரம்செரிந்தவர்களாக வரலாற்றுகாலம் தொட்டு இன்றுவரை விளங்கி வருகின்றனர்.தேவர் என்போர் கள்ளர்,மறவர் மற்றும் அகமுடையர் இம்மூவரும் உள்ளடக்கிய ஒரு சமூக கூட்டமைப்பு.இம்மூவரும் இணைந்தவொரு வீரவர்க்கமானது முக்குலத்தோர் யென்று வழங்கப்பட்டு வருகிறது.
ஆங்கில காலணித்துவ காலங்களில் அவர்களுக்கு கீழே அடிமைப்படுவதை எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தனர்.ஆங்கிலேய ஆதிக்கத்தின் போது தமிழகத்திலிருந்து சட்டிஸ்கர் பகுதிக்கு இடம் பெயர்ந்த தேவரின மக்கள் ஒரு சிறிய சமூகமாய் இன்றளவிலும் வசித்து வருகின்றனர்.
தேவர் (முக்குலத்தோர்) சமூகத்தினர் பெரும்பான்மையானோர் தென் தமிழகத்து மாவட்டங்களை பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.மேலும்,தஞ்சை,திருவாரூர்,நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,திருச்சி யென தமிழகத்தின் பெரும்பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.குறிப்பாக தென் தமிழகத்திலும்,மத்திய தமிழகத்திலும் தேவரின மக்கள் அதிகம் காணப்படுகின்றனர்.
முக்குலத்தோர் தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர்.
“கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற பாடலை செவி வழி கேட்டறிந்து இருக்கலாம்,
கள்ளர், அகமுடையர் (அகம்படியர்), மறவர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றனர். சங்ககாலம் பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய முன்று அரசர்கள் சேரர் சோழர் பாண்டியர் ஆவர இவர்கள் முவேந்தர்கள் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர் அவர்களை தவிர சில சிற்றரசர்களும் அதியமான், மலையமான்,தொண்டைமான்,பழுவேட்டரையன் போன்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர்.
இந்தியாவின் மிகச் சிறந்த அரசனாகத் திகழ்ந்தவன் மெளரியப் பேரரசன் அசோகன் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பெருமன்னன் இவன் தமிழகத்தை தவிர மொத்த இந்தியாவையும் ஆண்டு வந்தான் தனது கல்வெட்டுகளில் சோழர் பாண்டியர் கேரளபுத்ரர் ஸத்யபுத்ரர் ஆகியோரைக் குறிக்கிறான். இவர்களது நாடுகள் அவனது ஆட்சிக்கு உட்பட்டவை அல்ல. தனி ஆட்சி நடத்தியவை.
தொண்டைமான் கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன் இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான தொண்டைமான் குலத்தை சேர்ந்தவன் இவன் குல மரபினர் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை அரசாண்டு வந்தனர்.
அதியமான் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் இருந்த ஒரு நாட்டை ஆண்டோர் அதியமான்கள். இவர்கள் நாட்டின் தலைநகர் தகடூர் என்பதாகும். இது இன்றைய தர்மபுரி ஆகும். இப்போது அதியமான் கோட்டை தகடூரில் உள்ளது. இவர்கள் தமிழ்நாட்டின் மிகப் பழைய மரபான கள்ளர் குலத்தினர் எனக் கருதப்படுகிறது. இவர்கள் மலையமான் என்ற கள்ளர் குலப்பெயருடன்ஆட்சி செய்து வந்தனர் சங்கப் பாடல்களிலே அதியமான்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. சங்கப் புலவரான ஔவையாருக்கு நெடுமான் அஞ்சி என்னும் அதியமான் என்பவன் நெருங்கியவனாக இருந்தான் என்று சங்கப் பாடல்கள் காட்டுகின்றன மலையமான் மலையமான் திருமுடிக்காரி என்பவன் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்களில் ஒருவன். இவன் கள்ளர் குலப்பெயரில் ஒன்றான மலையமான் குலத்தை சேர்ந்தவன். இவன் சிறந்த வீரன்; பெரிய வள்ளல்; புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டவன்.
சோழர்: சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் அல்லது முக்குலத்தோரின் ஒரு குலத்தவர் என்பது பரவலான கருத்து
. மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் என்னும் பெயர் எவ்வாறு வழங்கத்தொடங்கியது என்பது தெரியவில்லை, சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடும்பம் அல்லது குலத்தின் பெயராகும் என்று பரிமேலழகரால் கருதப்பட்டது. சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவரும் சகோதரர்களே என்று கூறப்படுகின்றன. சோழர்கள் கள்ளர்கள் என்பதற்கு பல அதாரங்கள் உள்ளன தொல்லியல் துறையும் பல வரலாற்று ஆசிரியர்களும் இதை உறுதி செய்கின்றனர். இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, சுராதி ராசன் முதலாகவரு சோழன் எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர்,அரிஞ்சய தேவர்,கண்டராதித்ததேவர்,உத்தம சோழ மதுராந்தக தேவர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சோழர்களுக்கு வழங்கப்பட்ட அத்துணை பட்டப்பெயர்களும் இன்று கள்ளர்களுக்கே வழங்கப்படுகின்றன(தேவர்,மேல்கொண்டான், சோழங்கன், சோழகங்கன், நாடாள்வார்). சோழர்கள் பலர் திருமணம் செய்து கொண்டது மழவராயர்,பழுவேட்டரையர்,மலையமான்,வேளார் குடும்பத்தில் அந்த மழவராயரும்,பழுவேட்டரையரும்,மலையமான்  கள்ளர் தான்.
எடுத்துக்கட்டாக:
சுந்தர சோழனுடைய பாட்டி பழுவூர் பழுவேட்டரையர் வம்சத்தை சேர்ந்தவர்கள்.
கண்டராதித்தர் சோழன் – மழவராயர் மகள்
செம்பியன்  மாதேவி
சுந்தர சோழன்-மலையமான் வம்சத்து  வானவன் மாதேவி
இராஜராஜ சோழன் – கொடும்பாளூர் வேளார்  வம்சத்து வானதி
குந்தவை பிராட்டியை பற்றி தஞ்சை பெரிய கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் ராஜ ராஜ தேவரின் திருத் தமக்கையார், வல்லவரையர் வந்திய தேவரின் மகாதேவியார், ஆழ்வார் பராந்தக குந்தவையார் என்று பொறிக்கப்பட்டு விளங்குகின்றது.
மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்: ‘இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்ளர் என டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள். திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், ‘சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை’ என்பர். (செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்–175 இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் சோழர்கள் கள்ளர்கள் வகுப்பினரே என்பதில் சந்தேகம் இல்லை.
மறவர்: கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று. முற்காலத்தில் தமிழகத்தின் பலபகுதிகளை ஆண்ட மன்னர்களும், போர்ப்படையில் வீரர்களாக இருந்தவர்களும் இந்த சாதியினர்தான் என்று சொல்கிறார்கள்.
அகமுடையர் :அகமுடையர் என்போர் முக்குலத்தோர் என்னும் இனத்தை சேந்ததாகக் கருதும் மூன்று குலங்களில் ஒன்று. இம் முக்குலத்தோர் இனமானது தமிழகத்தையே ஆண்ட ஓர் இனம் என்று சிலர் கருதுகிறார்கள்.சேரன்,சோழன்,பாண்டியன் என இந்த மூன்று மன்னர்குலங்களும் “தேவர்” இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது. மேலும் தேவர் சாதியுடைய மக்கள் அனைவரும் அரச குலத்தை சேர்ந்தவர்கள் என்Ru சில ஆய்vuகள் தெரிவிக்கின்றன. “கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்” என்ற பாடl செவி வழியாக வருவதாக சிலர் கூறுகின்றார்கள். பொதுவாக தேவர் இனத்தினர் வீரம் செறிந்தவர்களாக இருப்பதாகக் கூறுவார்கள் .இந்திய துணை கண்டத்தின் தென் பகுதியையே தங்களது கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்து வந்துள்ளனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் தமிழை வளர்க்க மிகவும் செம்மையான பணிகளை செய்துள்ளனர். தேவர் இனத்தவர்களாக கருதப்படும் அரசர்களான சோழ,சேர ,பாண்டிய மன்னர்கள் அனைவருமே இந்தியாவை தாண்டி அருகில் உள்ள சில நாடுகளின் சில பகுதிகளையும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.

52 comments:

  1. சோழர்களின் நேரடி வாரிசுகள் அவர்களின் கடைசி தலை நகரான கங்கை கொண்ட சோழ புரத்திற்கு அருகாமையிலும் பிச்சாவரத்திலும் வசிக்கின்றனர். அவர்கள் வன்னியகுல க்ஷத்ரிய குலத்தின் கீழ் பட்டியளிடப்பட்டுள்ளனர். முக்குலத்தோர் வசிப்பது தென் தமிழ்நாட்டில். இவர்கள் சோழர்களுக்கு உரிமை கூறுவது எந்த விதத்தில் என்று புரியவில்லை. தேவர் என்ற பட்டத்தை சில சோழ அரசர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியாது. ராஜராஜ சோழன் உடையார் என்ற பட்டம் கொண்டிருந்தான். அதற்காக சோழர்கள் உடையார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூற முடியுமா? உடையார் என்று தனி சமூகம் உள்ளது. வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உடையார் என்ற பட்டபெயர் உள்ளது. மழவரையர், பழுவேட்டரையர், கச்சிராயர் ( பல்லவர்கள் ) போன்ற பட்டப்பெயர்கள் வன்னிய குல க்ஷத்ரியாவிலும் உள்ளது. இவர்கள் அனைவரும் சோழர்களும், பல்லவர்களும் ஆதிக்கம் செலுத்திய வட தமிழகத்தில் உள்ளனர். தென் தமிழகத்தின் கள்ளர் சமூகத்தில் சிலருக்கு இந்த பட்ட பெயர் வழங்குவதற்கு காரணம், சோழர்கள் அந்த இடங்களை கைப்பற்றியபோது தங்கள் நெருங்கிய சொந்தங்களை அங்கு பிரதிநிதிகளாக நியமித்தனர். அவர்களே இப்போது முக்குலத்தோர் சமுதாயத்தில் பட்டியளிடப்படுகின்றனர். தஞ்சையில் வன்னியர்களை கண்டிய தேவர் என்று அழிப்பார்கள் .. இவர்களுக்கும் தேவர் பட்டம் உண்டு … சேரர், பல்லவர் வன்னியர் குல க்ஷத்ரியர் …. வரலாறை மாற்றாதீர்கள்….
    வன்னியருக்கு மும்முடி சோழனார் , சழனார், தொண்டைமான், சோழனார், சேரனார் , படையாட்சி , பாண்டியனார், அஞ்சாத சிங்கம் போன்ற என்னில் அடங்காத பட்டமும் உண்டு …. அது மட்டுமில்லை க்ஷத்ரியர் பட்டம் கொண்ட ஒரே இனம் வன்னிய இனம் மட்டுமே …. இன்றும் சிதம்பரம் கோவிலில் வன்னியர் இனம் வந்த சோழ குல பாலயகாரகளுக்கு மட்டுமே முடி சூட்ட படுகிறது .. அங்கு வன்னியர் அன்றி வேறு யாருக்கும் முடி சூட்ட படாது .. அந்த உரிமை சோழர் வம்சத்துக்கு மட்டுமே உண்டு … உங்களால் முடிந்தால் கள்ளர்களுக்கு அங்கே முடி சூட்ட முடியுமா ?
    கடாரம் வென்றான் ராஜேந்திர சோழன் என்பார் .. அந்த படையை வழி நடத்திய கருணாகர தொண்டைமான் வன்னியர் … அதனால்தான் கம்பர் சிலை எழுபது என்ற நூல் எழுதினார் … அதில் வன்னியரான கருணாகர தொண்டைமான் என்று எழிருப்பார் … ராஜேந்திரா சோழன் கடாரம் வென்ற போதும் , வன்னியர் படை கொண்டே வென்றார் … அதனால்தான் கங்கை கொண்ட சோழபுரத்தை , ஜெயம் கொண்டம் என்னும் பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டினார் … அது முழுக்க வன்னியர்கள் வாழும் இடம்….வன்னியர் பெருமை நிலைத்து நிற்கவே , ராஜேந்திரன் அந்த கோவிலை அங்கே கட்டினான்… தேவர் சதி வாழும் இடத்தில் இல்லை …. பாண்டியனை தவிர, வேற யாருக்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது …. சேரர், பல்லவர் அக்னி குல க்ஷத்ரியர் …. அதே போல் தமிழ் நாட்டின் சாதி பட்டியலில் கூட வன்னியர் அல்லது அக்னி குல க்ஷத்ரியர் என்று உள்ளது .. தேவர்க்கு க்ஷத்ரியர் பட்டம் உள்ளதா ?

    தேவர்ப் பட்டம்:
    சங்க காலச் சோழர்கள் முதல் விஜயாலய சோழன், ஆதித்யச் சோழன், பராந்தகச் சோழன் வரை தேவர் பட்டதை யாரும் பயன் படுத்தியதில்லை. பராந்தகச் சோழனின் வாரிசுகளே தேவர் பட்டதைப் பயன்படுத்தியுள்ளனர். பராந்தகச் சோழனின் மனைவி கண்டியத் தேவர் வம்சத்தை சேர்ந்தவர். இந்தக் கண்டியத் தேவர்கள் இப்பொழுதும் தஞ்சாவூரில் வசிக்கின்றனர். இவர்கள் வன்னியகுல க்ஷத்ரியாவின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
    pallavarum, சேரரும் அக்னி குல க்ஷத்ரியர் ….இதுவும் தமிழக சாதி பட்டியல் படி வன்னியர் குல க்ஷதியரில் வருகிறது

    ReplyDelete
  2. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ReplyDelete
  3. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  4. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாளாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    ReplyDelete
  5. அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  6. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர்,வானரர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    ReplyDelete
  7. அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  8. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


    __________________________________________

    ReplyDelete
  9. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்


    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர் ஆவர்.
    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலுக்குப் பிறகு குலசேகர பாண்டிய கி.பி 1335 வரை மதுரையில் இருந்து ஆட்சி செய்தார். ஆனால் மதுரை சுல்தானகம் எனப்படும் மாபார் சுல்தானகம் என்ற துருக்கிய சுல்தானகம் கி.பி 1335 இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு வில்லவர்கள் தெற்கே சிவகாசிக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் தலைநகரம் திருவாடானை ஆனது. திருவாடானையிலிருந்து வடக்கே கோடியக்கரையையும் தெற்கே கன்னியாகுமரியையும் பாண்டிய வம்சத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருநெல்வேலியும் தூத்துக்குடியும் பாண்டியர்களின் கோட்டைகளாக இருந்தன. பாண்டிய வில்லவர்களின் பண்டைய அரச வீடான தென்காசியிலிருந்து மற்றொரு பாண்டிய குலத்தினர் ஆட்சி செய்தனர்.


    விஜயநகர நாயக்கர் தாக்குதல்

    1376 இல் விக்ரம பாண்டியன் வேணாட்டின் துளு-நேபாள குல அரசர் ஆதித்யவர்மா சர்வாங்கநாதன் உதவியுடன் துருக்கிய படையெடுப்பாளர்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தினர் மற்றும் அவர்கள் பாண்டியர்களாக வேடமணிந்த வாணாதிராயர் என்ற தெலுங்கு பாணர்களை மதுரை மன்னர்களாக்கினர்..


    சேர வில்லவர் குலங்களின் இடம்பெயர்வு

    சேர, பாண்டிய, சோழ வில்லவர்கள் வேணாட்டின் எல்லையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, கோட்டையடி ஆகிய இடங்களில் வரிசையாகக் கோட்டைகளைக் கட்டினர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.


    சந்திரசேகர பாண்டியருக்கும் உலகுடைய பெருமாளுக்கும் இடையேயான போட்டி

    1520களில் சந்திரசேகரராவ் மதுரையை மீட்டு மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். சந்திரசேகர பாண்டியரின் போட்டியாளர் கன்னியாகுமரியில் வசித்து வந்த உலகுடையப்பெருமாள். உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர் சிறிது காலம் மதுரையின் அரசரானார், அதே நேரத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்தார். உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் பட்டாணி ராகுத்தனுக்கு எதிரான போரில் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்றினார். உலகுடையப்பெருமாளையும், சரிய குலப் பெருமாளையும் துதித்து வில்லுப்பாட்டு வடிவில் பல்லவிகள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகின்றன.


    உறையூர் சோழர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களின் முடிவு

    உறையூரில் இருந்து ஆட்சி செய்த வீரசேகர சோழன் 1529 இல் விஜயநகர நாயக்கர்களால் இடம்பெயர்ந்தார். வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியனால் ஆளப்பட்ட பாண்டிய அரசை ஆக்கிரமித்தார். கிருஷ்ணதேவராயர் அனுப்பிய நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியனுக்கு மீட்டு கொடுக்கவில்லை. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையைத் தோற்கடித்து அவரைக் கைது செய்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    ReplyDelete
  10. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றன

    ReplyDelete
  11. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    கேரள வில்லவர் இடம்பெயர்வு

    துளு படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
    வில்லவர் கி.பி.1102ல் கொடுங்களூரில் இருந்து கொல்லத்திற்கு குடிபெயர்ந்தனர்.
    1120 இல் பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளர் ஒரு நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்தார். பாணப்பெருமாள் அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டார்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய இராச்சியத்தை தோற்கடித்தார். அடுத்த காலகட்டத்தில் வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகத்தின் துருக்கிய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். விரைவில் அனைத்து தமிழ் அரசுகளும், சேர சோழ பாண்டிய வம்சங்களும் முடிவுக்கு வந்தன. வில்லவர்கள் தோற்கடிக்கப்பட்ட குலமாக மாறினர்.

    கேரள வில்லவர் கிபி 1314 க்குப் பிறகு மேலும் தெற்கே திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு நகர்ந்து கன்னியாகுமரி மற்றும் சேரன்மாதேவிக்கு அருகிலுள்ள கோட்டையடியில் தங்கள் தலைநகரை நிறுவினார்.
    பண்டைய வில்லவர் தலைநகரான இரணியல் (ஹிரண்ய சிம்ம நல்லூர்) ஆய் வம்சத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது.

    சேரன்மாதேவி

    சேரன்மாதேவியில் கேரள வில்லவர்கள் மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இது கி.பி 1383 முதல் கிபி 1444 வரை துளு-சேராய் வம்சமான ஜெயசிம்ஹவம்சத்தின் தலைநகராக செயல்பட்டது.

    கோட்டையடி

    வாய்மொழி மரபுகளில் கன்னியாகுமரிக்கு அருகில் இருந்த கோட்டையடி என்னும் சேர கோட்டை இருந்த இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையடி கடைசி சேரர் கோட்டை. வேணாட்டின் ஆய் அரசரான ராமவர்மா கோட்டையடியைச் சேர்ந்த இளவரசியை மணக்க விரும்பியபோது அவர்கள் மறுத்துவிட்டனர். 'நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்' என்ற முதுமொழி இந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. பிற்காலத்தில் ஆய் வம்சம் வில்லவ நாடார்களின் எதிரியாக இருந்தது.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    கி.பி.1610 இல் குழித்துறையைத் தலைநகராகக் கொண்டு வேணாட்டை ஆண்ட துளு-ஆய் மன்னன் ராமவர்மா. கி.பி.1610க்குப் பிறகு வேணாடு மன்னர்களால் கோட்டையடி அழிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டிலிருந்து வேணாட்டுக்கு வில்லவர் இடம்பெயர்வு

    பாண்டியர் தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாண்டிய குலத்தினர் விஜயநகர நாயக்கர்களின் ஆட்சியை ஏற்று தென்காசியில் இருந்து ஆட்சி செய்யத் தொடங்கினர். மற்ற சோழ மற்றும் பாண்டிய வம்சங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தன.

    ReplyDelete
  12. கடைசி வில்லவர் தலைநகரங்கள்

    துளு மற்றும் தமிழ் வில்லவர் கலப்பு அரசுகள்

    கி.பி 1383 முதல் 1595 வரையிலான காலப்பகுதியில் தமிழ்ச் சேராய் இராச்சியத்துடன் கலந்த துளு தாய்வழி இராச்சியம் வேணாட்டை ஆண்டது. தமிழ்ச் சேராய் அரசை வில்லவர் வீரர்கள் ஆதரித்தனர்.
    வில்லவர் தலைநகரங்கள் கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு என்பவை.

    களக்காடு

    களக்காடு என்ற இடத்தில் ஒரு சோழர் குடும்பம் கோட்டை கட்டியது. களக்காடு ஜெயசிம்மவம்சத்தின் தலைநகராக கி.பி.1516 முதல் கி.பி.1595 வரை இருந்தது.

    துளு-சேராய் ஆட்சியாளர் பூதல வீர ஸ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா (கி.பி. 1516 முதல் கி.பி. 1535 வரை) சோழ இளவரசியை திருமணம் செய்து கொண்டார். தமது தலைநகரத்தை களக்காட்டிற்கு மாற்றினார்.

    பட்டங்கள்
    வென்று மண்கொண்ட பூதல வீரன்
    புலி மார்த்தாண்டன்
    தலைநகரம்: களக்காடு

    சோழ இளவரசி சோழகுலவல்லியை திருமணம் செய்தார்

    களக்காட்டின் மாற்றுப் பெயர் சோழகுலவல்லி புரம். களக்காடு இராச்சியம் முள்ளிநாடு என்று அழைக்கப்பட்டது. பூதல வீர உதயமார்த்தாண்ட வர்மா ஜேதுங்கநாட்டின் (கொல்லம்) ஆட்சியாளராக இருந்தார்.

    பாறை மற்றும் தோவாளை மலைகளுக்கு இடையே உள்ள நாடார்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கல்வெட்டு வைத்தார்.

    கிறிஸ்தவ பரவருக்கு வரிச் சலுகை கொடுத்தார்.
    நாகர்கோவில் ஜெயின் கோவிலுக்கு மானியம் வழங்கினார்.
    விஜயநகர படைத்தலைவனாகிய சலகராஜா சின்ன திருமலையதேவா பூதலவீரனை தாமிரபரணி கரையில் கிபி 1535 இல் தோற்கடித்தார். அவர் முன்பு வென்ற அனைத்து பாண்டிய பிரதேசங்களையும் சரணடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் விஜயநகரப் பேரரசின் கீழ் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

    கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம்

    தெற்கே குடியேறிய பாண்டியர்கள் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினார்கள். கல்லிடைக்குறிச்சி ஜெயசிம்ம வம்சத்தின் தலைநகராக கி.பி 1444 முதல் கிபி 1484 வரை இருந்தது).

    தென்காசி பாண்டியர்கள்

    இருப்பினும் தென்காசி பாண்டியர்கள் வேணாட்டின் துளு-சேராய் ஆட்சியின் ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்தனர். தென்காசி பாண்டிய நாடு மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தின் அடிமை நாடாக மாறியது

    வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு

    கி.பி 1610 இல் போர்த்துகீசியர்கள் கொச்சி இராச்சியத்தில் உள்ள வெள்ளாரப்பள்ளியிலிருந்து ஒரு பிராமண வம்சத்தை வேணாட்டின் ஆட்சியாளர்களாக உருவாக்கினர்.

    பிராமண ராணி பூரம் திருநாள் ஆற்றிங்கல் நம்பிராட்டியார் அம்மை என்ற திருநாமத்துடன் ஆற்றிங்கல் ராணி ஆனார்.

    வீரரவி வர்ம ரேவதி திருநாள் குலசேகரப் பெருமாள் (கி.பி. 1610 முதல் கி.பி. 1662 வரை) வேணாட்டின் முதல் பிராமண அரசர்.
    கொச்சி வெள்ளாரப்பள்ளியில் இருந்து கொச்சுராமன் உண்ணி பண்டாரத்தில் என்ற பிராமண இளவரசன் கி.பி 1630 இல் மீண்டும் தத்தெடுக்கப்பட்டார்.

    வில்லவர் ராஜ்ஜியங்களின் அழிவு

    கி.பி.1610க்குப் பிறகு வில்லவர் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
    சேர, ஆய், சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் முடிவுக்கு வந்தன.
    தென்காசி பாண்டிய வம்சமும் விரைவில் முடிவுக்கு வந்தது.

    வில்லவரின் வீழ்ச்சி

    1750 வரை வில்லவர் வீரர்கள் தங்கள் முன்னாள் எதிரிகளான திருவிதாங்கூரின் துளு-நேபாள மன்னர்களுக்கு கூலிப்படையாக பணியாற்றினர். இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகளை ஆண்ட வில்லவர்கள் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    ReplyDelete
  13. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடம், ஆரியம் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  14. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள்

    நாகர்கள் இந்தோ-ஆரியர்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்திருக்கலாம். ரிக்வேதத்தில் நாக மன்னன் நஹுஷன் குறிப்பிடப்படுகிறார். நாகர்கள் இந்தோ-ஆரியர்களின் கூட்டாளிகள்.

    திராவிட பாண, மீனா, தானவ மற்றும் தைத்திய குலங்களுக்கு எதிராகப் போரிட்ட ஆரிய மன்னர்கள் இந்திரன் என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளியில் ஆட்சி செய்த பண்டைய வில்லவர்-பாணர்களின் மூதாதையரான மஹாபலி மன்னர் இந்திரன் மற்றும் அவரது சகோதரர் உபேந்திரா ஆகியோரால் கொல்லப்பட்டனர்.

    நாகர்களின் மன்னன் நஹுஷன் இந்தோ-ஆரியர்களின் மன்னரானார் மற்றும் இந்திரன் என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டார். நஹுஷன் ஆரிய முனிவர்களை மதிக்கவில்லை. நஹுஷன் ரிஷிகளிடம் தான் அமர்ந்திருந்த பல்லக்கைச் சுமக்கச் சொன்னார். இது அவரது வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    நவீன இந்தி ஆரிய மற்றும் நாகா மொழிகளில் இருந்து உருவானது எனவே தேவநாகரி என்று அழைக்கப்பட்டது. நாகர்கள் நகரம் அல்லது நகர் எனப்படும் பல நகரங்களை கட்டியதாக புகழ் பெற்றுள்ளனர்.
    யாதவர்களும் பாண்டவர்களும் நஹுஷாவின் குலத்திலிருந்து வந்த நாகர்கள். நாகர்கள் நஹுஷா மற்றும் அவரது இந்திர குலத்திலிருந்து வந்தவர்கள் என்று கூறினர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் பல நாகர்கள் புத்த மதத்திற்கு மாறியதால் இந்தோ-ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே பகை தொடங்கியது. ஆரிய ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர்களில் பலர் இலங்கை மற்றும் தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.


    முற்குகர்

    முற்குகர் என்பவர்கள் கங்கைப் பகுதியில் இருந்து வந்த சிங்கர், வங்கர் மற்றும் காலிங்கர் என அழைக்கப்படும் குகன் குலத்தைச் சேர்ந்த மூன்று குலங்கள் ஆவர். முற்குகர் ஒரிசாவிற்கும் பின்னர் இலங்கைக்கும் குடிபெயர்ந்தனர்.
    முற்குஹர் குடியேற்றம் கிமு 543 இல் இளவரசர் விஜயா சிங்கள இராச்சியத்தை நிறுவ வழிவகுத்தது.
    நவீன சிங்கள-கலிங்க வம்சங்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்த முற்குஹரின் வழித்தோன்றல்கள்.


    மறவர்

    குகன் குலத்தைச் சேர்ந்த மறவர் கங்கை பகுதியில் மீனவர்களாக இருந்தனர். மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகளை ஸ்ரீராமர் வழங்கினார். மறவர் ஸ்ரீராமருடன் சேர்ந்து கிமு ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயக்கர் அரசன் ராவணனை தோற்கடித்தனர்.

    மறவர்களில் பலர் மீண்டும் வந்து இலங்கையை ஆக்கிரமித்து அங்கேயே குடியேறினர். மறவர் இலங்கையை ஒட்டிய பகுதிகளான ராமநாடு போன்றவற்றிலும் குடியேறினர்.. மட்டக்களப்பு மான்மியத்தின்படி மறவர் இராமநாட்டை வட இலங்கை என்று அழைத்தனர். முக்குவர்கள் மறவர் இனத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்கள் இருவரும் குகன் குலத்திலிருந்து வந்தவர்கள்.. முக்குவர் தமிழ்நாடு, கேரளா மற்றும் துளுநாட்டின் கடலோரப் பகுதிகளில் குடியேறினார்கள். முக்குவர் மறவர் போன்ற மீனவர்கள்.


    கல்வார்

    சித்தியர்களின் படையெடுப்பு நாகர்களை தென்னிந்தியாவிற்கு பெரிய அளவில் வெளியேறத் தூண்டியது. வட இந்தியாவின் கல்வார் குலங்கள் கிமு இரண்டாம் நூற்றாண்டில் சேதி நாட்டிலிருந்து ஒரிசாவிற்கு குடிபெயர்ந்து அங்கும் ஒரு சேதி சாம்ராஜ்யத்தை நிறுவினர். வட இந்திய கல்வார் குலங்கள் தென்னிந்தியாவில் கள்வர் அல்லது களப்பிரர் என்று அழைக்கப்பட்டனர். களப்பிரர்களிடமிருந்து நவீன கள்ளர் சமூகம் மற்றும் களப்பாளர் என்று அழைக்கப்படும் வெள்ளாளர்கள் வம்சாவளியினர் தோன்றினர்.

    கிமு 100 இல் காரவேளா என்ற கலிங்க ஆட்சியாளரின் கீழ் வெள்ளாளர்கள் வட தமிழகத்தை ஆக்கிரமித்தனர். கி.பி 250 இல் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலையிலிருந்து ஆட்சி செய்த களப்பிரர் சேர, சோழ மற்றும் பாண்டிய ராஜ்ஜியங்களைக் கைப்பற்றினர். இவ்வாறு சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்களை ஆண்ட வில்லவர் வம்சங்கள் சேதி சாம்ராஜ்யத்திலிருந்து வந்த நாக குலங்களால் கீழ்ப்படுத்தப்பட்டன.


    கங்கர்

    கி.பி 200 இல் கங்கை நதி தீரத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் கங்கர் அல்லது கொங்குகள் என்று அழைக்கப்பட்டவர்கள். கங்க மக்களிடமிருந்து நவீன வொக்கலிகா கவுடா மற்றும் கவுண்டர்கள் தோன்றினர். கொங்கு வேளாளர்கள் தங்கள் கங்க இக்ஷவாகு வம்ச மன்னர் அவினிதாவின் (கி.பி. 469 முதல் கி.பி 529 வரை) ஆட்சியின் போது தமிழ்நாட்டின் கொங்கு பகுதியை ஆக்கிரமித்தனர்.

    வில்லவர் சேரர்கள் தங்கள் தலைநகரான கருவூரையும் கொங்கு மண்டலத்தையும் கொங்கு வேளாளர் என்று அழைக்கப்படும் கங்கைக் குடியேற்றக்காரர்களிடம் இழந்தனர். கி.பி ஆறாம் நூற்றாண்டில் சேர தலைநகர் கேரளாவில் உள்ள கொடுங்களூருக்கு மாற்றப்பட்டது.


    இந்திர குலம்

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வெள்ளாளர் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான நாக குலங்கள் இந்திரனின் வழிவந்ததாகக் கூறுகின்றனர். நாக மன்னன் நஹுஷன் இந்திரன் ஆன பிறகு நாக குலத்தினர் தங்களை இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  15. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    முடிவுரை :

    திராவிடர்கள்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    ReplyDelete
  16. வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  17. வில்லவர்-மீனவர் மற்றும் முக்குலத்தோர்


    சேர, சோழ, பாண்டிய அரசுகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. பழங்காலத்தில் பாண்டிய அரசு மட்டுமே இருந்தது. பின்னர் அது பிரிந்து சேர சோழ பாண்டிய அரசுகளை உருவாக்கியது.

    வில்லவர் உபகுலங்கள் இவை

    1. வில்லவர்
    வில்லவர் வேட்டைக்காரர்கள், வில்லும் அம்பும் சின்னமுள்ள கொடியை ஏந்தியவர்கள்.

    2. மலையர்
    மலையர் மலைப்பகுதிகளில் வாழ்ந்தனர்.. மலை சின்னம் கொண்ட கொடியை ஏந்தியிருந்தனர்.

    3. வானவர்
    வானவர் காடுகளில் வாழ்ந்தனர், அவர்கள் மரச் சின்னம் அல்லது புலி சின்னம் கொண்ட கொடியை ஏந்தி வந்தனர், இவை இரண்டும் காடு தொடர்பானவை.

    மற்றும் அவர்களின் கடல் செல்லும் உறவினர்கள்

    4. மீனவர்
    மீனவர் மீன் சின்னம் கொண்ட கொடியை ஏந்தியவர்கள்.

    இந்த வில்லவர்-மீனவர் குலங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து நாடாள்வர் குலங்களை உருவாக்கியது.
    எனவே நவீன வில்லவர் மக்கள் உருவாயது அனைத்து வில்லவர்களின் குலங்களின் இணைப்பின் விளைவாகும்.

    திராவிட வில்லவர்-மீனவர் குலங்கள் சேர, சோழ பாண்டிய அரசுகளை நிறுவினர்.
    வில்லவர் சோழ வம்சத்தின் மன்னர்கள். வில்லவர்-மீனவர் குலங்கள் பாண்டிய வம்சத்தை நிறுவினர். வில்லவர் என்பவர் சேர வம்சத்தின் மன்னர்கள்.


    ____________________________________________


    நாகர்கள்

    நாகர்களுக்கு எதிராக வில்லவர்-மீனவர் இடையே நடந்த பண்டைய போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு மத்திய இந்தியாவை இழந்ததை கலித்தொகை குறிப்பிடுகிறது. பின்னர் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்து தென்னிந்தியாவிற்கு இடம்பெயரத் தொடங்கினர்.

    நாகர்கள் பண்டைய காலத்தில் கங்கை மண்டலத்தில் இருந்து வடக்கு நோக்கி குடியேறியவர்கள். கனகசபைப் பிள்ளை அவர்களால் 1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் என்ற நூலில் மறவர், எயினர், அருவாளர், ஓவியர், ஓலியர், பரதவர் ஆகியோர் தென்னிந்தியாவிற்குப் புலம் பெயர்ந்து குடியேறிய நாகர்கள் என்று கூறுகிறார்.


    முற்குகர்

    பதினாறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம், கலிங்கர், வங்கர், சிங்கர் ஆகிய மூன்று குலத்தவரும் கங்கையின் சரயு நதிக் கிளையில் உள்ள புராணங்களில் கூறப்படும் படகு வீரன் குகனிடமிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறது.

    மூன்று குஹன் கலத்தினர் முற்குஹர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். முற்குஹரின் கிளைகள் இவை

    1. முற்குகர் அல்லது முக்குவர்
    2. மறவர்
    3. கலிங்கர்-சிங்களவர்.

    முற்குஹர் முதலில் இலங்கையை ஆக்கிரமித்ததாகவும், பின்னர் கடலோர இந்தியாவையும் பின்னர் ராம்நாட்டையும் ஆக்கிரமித்ததாகவும் அது கூறுகிறது. மறவர்களால் ராமநாடு வட இலங்கை என்றும் அழைக்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறியது. மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் இந்தியாவை ஆக்கிரமித்த நாக குலத்தவர்.

    காலனித்துவ காலத்தில் கலிங்கர் வம்சத்தினர் மட்டக்களப்பை ஆண்டனர்
    முக்குவர் மட்டக்களப்பில் பொடி வட்டாட்சியர் போன்ற மிக உயர்ந்த பதவிகளை வகித்தார்கள். கலிங்க பிரபுத்துவத்தின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் முற்குகர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.

    அதேபோன்று மட்டக்களப்பு வன்னிய பிரதேச நிர்வாகிகளாக மறவர்கள் நியமிக்கப்பட்டனர். நாகர்களாக இருந்த மறவர்களும் கலிங்க, வங்க சிங்க ராஜ்ஜியங்களுக்கு குடிபெயர்ந்து அங்கிருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு வந்தனர்.


    இலங்கை முக்குலத்தோரின் மூன்று சாதிகள் முக்குவர் கலிங்கர்-சிங்களவர் மற்றும் மறவர்.

    ஆனால் இந்திய முக்குலத்தோரில் முக்குவர் சேர்க்கப்படவில்லை.
    மாறாக அகமுடையார் எனப்படும் துளு விவசாயிகள், மறவர் மற்றும் கள்ளர் என்ற களப்பிரர் ஆகியோர் முக்குலத்தோர் குலத்தை உருவாக்குகின்றனர்.

    ReplyDelete
  18. நாகர்

    நாகர்கள் அடிப்படையில் வட இந்திய மக்கள் ஆனால் ஆரியர்களிடமிருந்து இன ரீதியாக வேறுபட்டவர்கள். நாகர்கள் ஆரியர்களின் அடிபணிந்த மக்கள். நாகர்கள், ஆரியர்கள் மற்றும் திராவிடர்கள் இந்தியாவின் மூன்று வெவ்வேறு இனங்கள்.

    ஹிந்தி

    இந்தி மொழி தேவநாகரி என்றும் அழைக்கப்படுகிறது, இது தேவ (ஆரியன்) மற்றும் நாக மக்களின் மொழியாகும்.

    இந்திரன்

    இந்திரன் தேவர்களின் அரசன், பெரும்பாலும் ஆரிய மக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சில நாகர்களும் தேவநாகரி மக்களின் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நஹுஷன் இந்திர அந்தஸ்தை அடைந்த ஒரு வரலாற்றுக்கு முந்தைய நாக அரசன்.

    நஹுஷன்

    ஆளும் இந்திரன் சாபத்தால் நீக்கப்பட்டதால் நஹூஷன் இந்திரனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நஹூஷன் பிரதிஷ்டானாவை, அதாவது மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைதான் நகரத்தை ஆட்சி செய்தார். இது கலித்தொகையில் கூறப்பட்ட நாகர்கள் மத்திய இந்தியாவின் ஆக்கிரமிப்பு காலத்திற்கு ஒத்திருக்கலாம்.

    நஹூஷனின் மகன் யயாதி. யயாதியின் மகன்கள் புரு, பாண்டவர்கள் மற்றும் கவுரவர்களின் மூதாதையர்யது, யாதவர்களின் மூதாதையர் என்பவராவர். யது துர்வாஷா குலத்தினருடன் சேர்ந்து ஒரு குல ஒன்றியத்தைக் கொண்டிருந்தனர், மேலும் அடிக்கடி ஒருங்கிணைந்தவர்களாக விவரிக்கப்பட்டதனர். இவ்வாறு பாண்டவர்களும் கவுரவர்களும் யாதவரும் நாக அரசன் நஹூஷனிடமிருந்து தோன்றியவர்களாக இருக்கலாம்.

    இந்திரனின் வழித்தோன்றல்கள்

    கங்கை நதி பகுதியிலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்த நாகரும் இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து வந்ததாகக் கூறுகின்றனர்.

    நஹுஷன் → யயாதி
    யயாதி → புரு வம்சம்
    புரு வம்சம் → குரு வம்சம் + யாதவ வம்சம்
    குரு வம்சம் → கவுரவர்கள்+ பரத வம்சம்

    கவுரவ வம்சாவளியினர்

    தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்கள், கவுரவ அல்லது குருகுல அல்லது பரதகுலத்தின் சந்ததியினர் என்று கூறுவது வழக்கம். கரையர், கொண்டா கரவா மற்றும் பிற மீனவ சமுதாயத்தினர் தாங்கள் கவுரவர்களின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். இந்தியாவில் இந்த நாகர்கள் தமிழர்கள் போல் காட்டிக்கொள்கிறார்கள், ஆனால் சிங்கள பிரதேசங்களில் அவர்கள் எப்போதும் தங்களை கவுரவ அல்லது பரத வம்சாவளியினர் என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

    நாகர்களுக்கு எதிரான போர்

    திராவிட வில்லவர் மீனவரின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் நாகர்களுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர் மீனவர் தோற்கடிக்கப்பட்டதினால் நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர். இந்த போர் கிமு 1100 ற்கு முன்பு நடந்திருக்கலாம். நஹூஷன் இந்த காலத்திற்குப் பிறகு மத்திய இந்தியாவில் மகாராஷ்டிராவில் உள்ள பிரதிஷ்டானாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.

    தென்னிந்தியாவிற்கு குடியேறிய நாகர்கள்

    நாகரின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கு குறிப்பாக கடலோரப் பகுதிகளுக்கு குடிபெயர்ந்தன.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குஹன்குலத்தோர் (மறவர், முற்குஹர், சிங்களவர்)
    3. கவுரவர்கள் (கரவே, கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (களப்பாளர்- வெள்ளாளர், கள்ளர்)
    6. அஹிச்சத்திரம் நாகர்கள் (நாயர்)

    ReplyDelete
  19. நாகர்

    குஹன் வம்சாவளியினர்

    குஹன் வம்சாவளியினர் கங்கை நதியின் துணை நதியான சரயு ஆற்றின் கரையில் உள்ள புராண கால படகுக்காரரான குஹனின் குலத்தைச் சேர்ந்தவர்கள். கங்கை நதியைக் கடக்க குஹன் பகவான் ஸ்ரீ ராமருக்கு உதவினார். பகவான் ஸ்ரீராமர் குஹன் குலத்தை அயோத்திக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு பதவிகள் கொடுத்தார்.

    ராவணனுடன் போர்

    குஹன் குலத்தினர் அயோத்திய படையில் ஒரு பகுதியாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமருடன் தென்னிந்தியாவிற்கு வந்தனர். கிஷ்கிந்தாவைச் சேர்ந்த வானர - வாணர் பாணருடன் சேர்ந்து குஹன் குலத்தினர் ராவணனுக்கு எதிராகப் போரிட்டனர். ராவணன் இயக்கர் குலத்தைச் சேர்ந்தவர், அவர் திராவிட மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் தமிழ் பேசினார். இராவணனின் சிற்றப்பர் முனிவர் அகஸ்தியர் தமிழுக்கு அகத்தியம் என்ற இலக்கணம் எழுதினார். கிமு ஆறாம் நூற்றாண்டில் இராவணன் ஆட்சி செய்திருக்க முடியும்.

    மகாபாரதம் குருஷேத்திரப் போர் மற்றும் ராஜசூய யக்னம் ஆகியவற்றில் பங்கேற்ற இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள அரசரைக் குறிப்பிடுகிறது. ராவணனின் மாமனார் மாயா தானவரும், விபீஷணனும், மகாபாரத காலத்தில் வாழ்ந்தவர்கள். கிபி 543 இல் விஜயா சிங்கள ராஜ்ஜியத்தை நிறுவினார். இதனால் மகாபாரதத்தின் படி இலங்கையில் விபீஷணனும் ஒரு சிங்கள அரசனும் ஒரே சமயத்தில் வாழ்ந்திருக்கலாம் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில்.

    மறவர்

    மறவர்கள் கங்கை ஆற்றில் மீனவர்களாக இருந்தனர், அவர்கள் ஸ்ரீராமரால் அயோத்திக்கு அழைக்கப்பட்டனர் மற்றும் அயோத்தியில் அவர்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. அயோத்தியின் வம்சாவளியை மறவர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. பிற்காலத்தில் மறவர் ஸ்ரீராமரின் தோழர்களாக மாறி தென்னிந்தியாவுக்கு வந்தனர். மறவர் வானரரோடு சேர்ந்து ராவணனை ஆக்கிரமித்து தோற்கடித்தனர். மட்டக்களப்பு மான்மியம் அரக்கர் வம்சத்தை அழித்தவர்கள் என மறவரைப் போற்றுகிறது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் ராவணனுடன் மறவரும் வானரரும் போரிட்டிருக்கலாம்

    வீரனென்னும் பரதிகுல யிரகு முன்னாள் வேட்டை சென்றெங்கள் குலமெல்லி தன்னை மாரனென்றணைத்தீன்ற சவலையர்க்கு வரு இரகு நாடனென நாமமிட்டு பூருவத்திலயோத்தி யுரிமையீந்து போன பின்னர் சிறிராமர் துணைவராகி தீரரென்னுமரக்கர்குலம் வேரறுத்த சிவ மறவர்குலம் நானும் வரிசை கேட்டேன்(மட்டகளப்பு மான்மியம்)

    இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு பல நாகர்கள் இலங்கைக்கு இடம்பெயர ஆரம்பித்தனர் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது.

    ReplyDelete
  20. நாகர்

    முற்குஹரின் இலங்கை படையெடுப்பு

    அயோத்தியைச் சேர்ந்த முற்குஹர் இலங்கை மீது படையெடுத்தனர்.

    இலங்கையின் வனப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலே அயோத்தியினின்றும் முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர்.
    (மட்டக்களப்பு மான்மியம்)

    குஹன் குலத்தின் மூன்று கிளைகள்

    மட்டக்களப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, குஹனின் மூன்று கிளைகள் சிங்கர் வங்கர் மற்றும் கலிங்கர். நாகர்கள் கங்கையில் கிழக்கு நோக்கி நகர்ந்து வங்காளம் மற்றும் கலிங்கத்தில் ராஜ்யங்களை நிறுவினர் அல்லது இணைந்தனர்.
    இவை குகன்மூன்று பண்டைய ராஜ்யங்கள்

    1. சிங்கர்- வங்காளத்தில் சிங்கள நாடு
    2. வங்கர் - வங்காளம்
    3. கலிங்கர் - ஒரிசா

    இந்த நாடுகளில் இருந்து நாகர்கள் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மற்றும் இலங்கையில் குடியேறத் தொடங்கினர்.

    குஹன் குலத்தின் மூன்று துணைப்பிரிவுகள்

    மூன்று குஹன் கிளைகளான சிங்கர், வங்கர் மற்றும் கலிங்கரில் இருந்து வந்த நாகர்கள் இணைவதன் மூலம் நாகர்களின் மூன்று குலங்கள் தோன்றின.
    இவை

    1. சிங்களவர்கள்
    2. மறவர்
    3. முற்குஹர் (முக்குவர்)

    இந்த மூன்று குலங்களும் மட்டக்களப்பு மான்மியத்தின் படி இலங்கையில் முற்குலத்தோர் அல்லது முக்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர். சிங்களவர்களுடனான இந்த நெருங்கிய உறவின் காரணமாக, கண்டியின் கலிங்கன் அரசர்களால் ஆளப்பட்ட மட்டக்களப்பில், முக்குவர் பொடி எனப்படும் மட்டக்களப்பு பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியத்தில் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் முக்குவர் ஆளுநர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    இதேபோல் மறவர் வன்னியர் என்னும் மட்டக்களப்பு பகுதியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். எனினும் வடக்குத் தமிழ்ப் பகுதியாகிய, யாழ்ப்பாணத்தில் மறவரும் முக்குவரும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை. குஹன் குலங்களாகிய சிங்களவர்கள், மறவர் மற்றும் முக்குவர் ஆகியோர் கிமு 543 இல் விஜயபாஹுவின் படையெடுப்பின் பின்னர் குடியேறியிருக்கக்கூடிய ஆரம்பகால நாகர் குடியேற்றக்காரர்களாக இருக்கலாம்.

    இந்தியன் முக்குலத்தோர்

    இந்தியாவில் மறவர் முக்குவரில் இருந்து தங்களை தூரப்படுத்திக் கொண்டு, களப்பிரர்கள் மற்றும் தெற்கு ஆற்காடு பகுதியில் உள்ள துளுவ வெள்ளாளர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

    ReplyDelete
  21. நாகர்

    வட இந்தியாவில் நாக வம்சங்கள்

    ஆரம்ப காலத்தில் நாகர்கள் ஆரியர்களுக்கு சமமாக கருதப்பட்டனர். நாகர்களுக்கு உயர் அந்தஸ்து இருந்தது மற்றும் இந்திரனாகவும் முடியும். பல நாக வம்சங்கள் வட இந்தியாவை ஆண்டன. சிசுநாகா வம்சம் (கிமு 413 முதல் 345) மற்றும் நந்தா வம்சம் (கிமு 345 முதல் 322 வரை) என்பவை வட இந்தியாவை ஆண்ட கடைசி நாக வம்சங்கள். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட வகுப்பாக மாறினர். நாகர்கள் தெற்கு ராஜ்யங்களுக்கு அடிமை வீரர்களாக விற்கப்பட்டனர். ஆறாம் நூற்றாண்டிலிருந்து நாகர்கள் புத்தமதத்தை ஏற்றுக்கொண்டது அவர்களுக்கு சீரழிவை ஏற்படுத்தியிருக்கலாம்.

    பௌத்த நாகர்கள்

    புத்த நாகர்கள் நாகர்கள் இக்ஷ்வாகு வம்சத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். காசியை ஆண்ட இக்ஷ்வாகு வம்சத்தின் கடைசி மன்னர் பிரசன்னஜித் புத்த மதத்திற்கு மாறி புத்த பகவானின் சீடரானார். இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் ஆரிய நடைமுறைகளுக்கு எதிராக கலகம் செய்து தங்களை புத்த மதத்திற்கு மாற்றிக் கொண்டனர்.

    ஆரியர்களின் எதிர் தாக்குதல்

    புஷ்யமித்ரா சுங்கர் (கிமு 185 முதல் கிமு 149 வரை) என்ற ஒரு மௌரிய பேரரசின் பிராமண சேனாபதி மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் பிருஹத்ரத மௌரியரைக் கொன்றார். புஷ்யமித்ர சுங்கர் சுங்க வம்சத்தை நிறுவினார். புஷ்யமித்ரா சுங்கர் புத்தமதத்தவர்களைத் துன்புறுத்தினார், அவர்களில் பெரும்பாலோர் நாகர்கள் ஆயிருந்தார்கள். புஷ்யமித்ர சுங்கர் புத்த நூல்களை எரித்தார் மற்றும் புத்த மடங்களை இடித்தார்இந்த காலத்திற்குப் பிறகு நாகர்கள் சீரழிக்கப்பட்டனர்.

    வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களை இந்து மதத்திற்கு மாற்றுதல்

    பிராமணர்கள் சித்தியன் மற்றும் ஹூணர் போன்ற புதிய வெளிநாட்டு படையெடுப்பாளர்களை இந்து மதத்திற்கு மதம் மாற்றினார்கள். பிற்காலத்தில் ஜாட் குலங்களும் ராஜபுத்திரர்களும் வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து தோன்றியிருக்கலாம். ஈராக்கைச் சேர்ந்த மொஹ்யால் பிராமணர்கள் முதலில் துருக்கிய மக்களாகத் தோன்றினாலும் இப்போது பிராமணர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்.
    வட இந்தியாவில் நாகர்கள் கீழ் அடுக்குக்கு தள்ளப்பட்டனர். நாகர்கள் தென்னிந்தியாவிற்கு பெருமளவில் குடியேறுவதற்கு நாகர்களைத் துன்புறுத்தியது ஒரு காரணமாக இருக்கலாம். கிமு 150 இல் சித்தியன்-சாகர் படையெடுப்பு மற்றொரு காரணமாகும்.

    பத்மாவதியின் நாகர்கள் (கி.பி. 170 முதல் கி.பி. 350 வரை)

    மத்திய இந்தியாவின் இந்து வம்ச நாகர்கள், குஷானரின் ஆட்சி முடிந்த பிறகு மீண்டும் எழுச்சியடைந்தனர். விதிஷாவைச் சேர்ந்த நாகர்கள் தங்கள் ஆட்சியை மதுராபுரி வரை நீட்டித்தனர். அவர்கள் சாக ஆட்சியாளர்களின் சமகாலத்தவர்கள். இறுதியில் அவர்கள் கி.பி 350 ல் குப்த சாம்ராஜ்யத்தால் அடிபணிய வைக்கப்பட்டனர்.

    ReplyDelete
  22. நாகர்

    இந்தோ-சித்தியன் இராச்சியம் (கிமு 150 முதல் கிபி 400 வரை)

    இந்தோ-சித்தியன் படையெடுப்பு மற்றும் சிந்து, கங்கை மற்றும் நர்மதா நதி பள்ளத்தாக்குகளின் ஆக்கிரமிப்பு ஆகியவை சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார்களின் ஒரு பெரிய வெளியேற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் சேதி இராச்சியத்தைச் சேர்ந்த கல்வார் தென்னிந்தியாவில் களப்பிரர் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய கல்வார் குடும்பப்பெயர்கள் காலர், கள்ளர், கலியாபாலா மற்றும் காலாள் ஆகியவை களப்பிரர் பட்டங்கள் கள்வர், கலியர், கள்ளர் மற்றும் களப்பாளர் ஆகியவற்றுடன் நெருக்கமாக ஒத்திருக்கிறது.

    சேதி இராச்சியம்

    சேதி இராச்சியம் மத்தியப்பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. கல்வார் சேதி இராச்சியத்தில் வசிப்பவர்களாக இருந்திருக்கலாம். கல்வார் பண்டைய ஒரிசாவிற்கும் பின்னர் தமிழ்நாட்டிற்கும் குடிபெயர்ந்திருக்கலாம், அங்கு அவர்கள் களப்பிரர் அல்லது களப்பாளர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    கியி 6 ஆம் நூற்றாண்டில் மஹிஷ்மதியிலும், கிபி 10 ஆம் நூற்றாண்டில் திரிபுரியிலும் காலச்சூரி ராஜ்ஜியங்களை நிறுவிய அதே மக்களாக கல்வார் இருக்கலாம். காலச்சூரி வீரர்கள் சூரி என்ற ஒரு வகை கத்தியைப் பயன்படுத்தினர். களப்பிரர் படையெடுப்புக்குப் பிறகு சூரி கத்தி தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டது.

    கலிங்க மன்னர் காரவேளா (கிமு 105)

    காரவேளா கிமு 105 இல் வட தமிழகத்தை ஆக்கிரமித்தார். வட தமிழ்நாட்டை ஆக்கிரமித்த காரவேளாவின் தளபதிகள் வேளிர் அல்லது வேள் ஆளர் அல்லது காராளர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் கலிங்கத்தில் இருந்து வந்ததால், வேளாளர் கலிங்க குலம் என்றும் அழைக்கப்பட்டனர். வேளாளர் ஆரம்பகால களப்பிரர், அவர்கள் களப்பாளர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். களப்பாளர் களப்பிரரின் பிரபுக்கள். வெள்ளாளருக்கு பிள்ளை மற்றும் முதலியார் குடும்பப்பெயர்களும் உள்ளன.

    கள்வர் கோமான் புல்லி

    ஆரம்பகால கிறிஸ்து சகாப்தத்தில், கள்வர் கோமான் என்றழைக்கப்படும் மாவண் புல்லி என்ற ஒரு களப்பிர ஆட்சியாளர் திருப்பதியில் ஆட்சி செய்தார்.

    களப்பிரர் படையெடுப்பு மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் அல்லது கலியர் அல்லது கள்வர் தமிழ்நாட்டின் முடிசூட்டப்பட்ட மூன்று அரசர்களையும் தோற்கடித்து தங்கள் ஆட்சியை நிறுவினர். அடுத்த மூன்று நூறு வருடங்கள் தமிழகம் இருண்ட யுகத்திற்கு சென்றது. களப்பிரர் தலைநகரம் பெங்களூருக்கு அருகில் உள்ள நந்தி மலையில் இருந்தது. களப்பிரரின் வழித்தோன்றல்கள் களப்பாளர்-வெள்ளாளர் மற்றும் தமிழ்நாட்டின் கள்ளர் சமூகத்தினர் ஆவர்.

    கள்ளர்

    இந்திரன் மற்றும் அஹல்யாவிலிருந்து கள்ளர் வந்ததாக பூவிந்திர புராணம் மற்றும் கள்ள கேசரி புராணம் கூறுகின்றன. வரலாற்று ரீதியாக கள்ளர் கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர் படையெடுப்பாளர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

    கள்ளர், மறவர், அகமுடையார் மற்றும் வேளாளர்கள் மூன்றாம் தமிழ் சங்க காலத்தில் (கிமு 500 முதல் கிபி 300 வரை) கங்கை நதி பகுதியிலிருந்து தமிழகத்திற்கு குடிபெயர்ந்த நாக பழங்குடியினர். அவர்கள் இந்திரன் மற்றும் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றனர்.

    இந்திர குலம்

    இந்திரன் ரிஷி கௌதமரின் மனைவி அஹல்யாவுடன் சட்டவிரோத உறவு கொண்டிருந்தார். அகல்யா இந்திரனுக்கு மூன்று மகன்களைப் பெற்றெடுத்தார், அவர்கள் முறையே கள்ளர், மறவர் மற்றும் அகம்படியர் என்ற பெயர்களைப் பெற்றனர். தேவன் அல்லது இந்திரனின் வழித்தோன்றல்கள் என்று கூறுகின்றனர். (திரு. எஃப். எஸ். முல்லேய்)


    ஆனால் தாய்லாந்து இராமாயணம் ராமாகியனின் கூற்றுப்படி, இந்திரன் மூலம் அஹல்யாவுக்குப் பிறந்த குழந்தை பாலி மற்றும் சூர்யனின் மூலம் பிறந்த குழந்தை சுக்ரீவன் என்பவர்கள் ஆவர்.

    கள்ளர் மறவர் கனத்ததோர் அகமுடையர் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆனார்

    கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் மெதுவாக வெள்ளாளர்களாக மாறினர். இவ்வாறு வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் அனைவரும் இந்திர குலத்தைச் சேர்ந்தவர்களே.

    கள்ளர் திருமணங்களில் மணமகன் தான் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த வேண்டிய காரணம் இதுதான். ஆலா என்றால் நாகம். தளவாலா நாடு என்றால் நாக நாட்டின் தலைமை என்று பொருள் கொள்ளலாம். கள்ளர்கள் நாக பழக்கவழக்கமான பலகணவருடைமையை பின்பற்றினர்.

    கரையர்

    மட்டக்களப்பு மகான்மியம், கரையர் இலங்கையின் செழிப்பால் ஈர்க்கப்பட்டு இலங்கைக்கு இடம்பெயரத் தொடங்கினார் என்று கூறுகிறது. கரையர் கவுரவர் மற்றும் பரதரிடமிருந்து வந்தவர் என்று தமது வம்சாவளியைக் கோருகிறார்கள். கி.மு. 300 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மூன்றாவது சங்க காலத்தில் கரையர் இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்.

    ReplyDelete
  23. நாகர்

    சங்க இலக்கியத்தில் நாகர்கள்

    சங்க இலக்கியம் மறவர், எயினர், அருவாளர், ஒளியர், ஓவியர், பரதவர் ஆகியோர் தமிழ்நாட்டிற்கு குடியேறிய பழமையான நாகர்கள் என்று குறிப்பிடுகிறது.

    பரதவர்

    பரதவர் தங்களை பர்வத ராஜகுலம் என்றும் பரதகுல க்ஷத்திரியர் என்றும் அழைக்கின்றனர். கங்கைப் பகுதியில் வேதகால குலங்களில் பர்வத குலமும் ஒன்று. கிமு ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு மற்றும் கங்கை பகுதிகளில் வசித்திருந்த பர்வத குலம் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரதராஜா என்பது கி.பி 1 முதல் 3 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட பலூசிஸ்தானை ஆண்ட ஒரு ஈரானிய வம்சமாகும். பலூசிஸ்தானில் பிராகுய் என்று அழைக்கப்படும் வடக்கு திராவிட மொழி இன்னும் பேசப்படுகிறது. கி.பி முதல் நூற்றாண்டில் பரதவர் தங்கள் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்திருக்கலாம். அதே காலகட்டத்தில் அவர்கள் சங்க கால தமிழகத்தில் தோன்றினர். பாண்டிய ஆட்சியாளர்களுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தனர் ஆனால் பாண்டியர்கள் அவர்களை தோற்கடித்து அடக்குவதில் வெற்றி பெற்றனர். கிபி 210 இல் இரண்டாம் நெடுஞ்செழியன் வரி செலுத்த மறுத்த பரதவரை தோற்கடித்தார்.

    இலங்கையின் அசல் மக்கள்.

    இலங்கையின் பூர்வீக மக்கள் இயக்கர் ஆவர். இயக்கர் திராவிட வில்லவர்களிடமிருந்து இனரீதியாக வேறுபட்ட ஒரு சிறிய இனத்தினர் ஆவர். ஆனால் அவர்கள் அசுர-திராவிட மக்களுடன் கலந்தார்கள், மேலும் அவர்கள் தமிழ் பேசினார்கள். இலங்கையின் பிற குடியிருப்பாளர்கள் திராவிடர்கள்-அசுர மக்கள். இந்த தீவு வில்லவர் வம்சங்களின் அதாவது சேர சோழ பாண்டியன் வம்சங்களின் செல்வாக்கிலும் கட்டுப்பாட்டிலும் இருந்தது. அகஸ்திய முனிவர் தமிழ்நாட்டில் உள்ள அகஸ்திய மலையில் தங்கியிருந்தார். முனிவர் அகஸ்தியர் இயக்கர் மன்னர் இராவணனின் சிற்றப்பா ஆவார்.

    தென்கிழக்கு இலங்கையில் கொமரி என்ற இடம் உள்ளது. மதுரா என்ற இடம் தெற்கு மத்திய பகுதியில் உள்ளது, அதில் இருந்து மதுரா ஓயா (ஆறு) என்று ஒரு ஆறு ஓடத் தொடங்குகிறது. குமரி மற்றும் மதுரா ஆகிய இடங்கள் பிரளயத்தால் அழிக்கப்பட்ட குமரிக்கண்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இலங்கையின் மிகப்பெரிய நதி மகாவெலி கங்கை என்று அழைக்கப்பட்டது. மகாபலி இந்தியாவின் வில்லவர் மற்றும் பாண மக்களின் மூதாதையர் ஆவார். ஆனால் கங்கை நாகர்கள் வந்தவுடன் அவர்கள் கங்கா என்ற பெயரையும் அதனுடன் சேர்த்துள்ளனர்.

    இலங்கையின் பழைய பெயர் தாம்பபாணி, இது தமிழ்நாட்டில் தாமிரபரணி நதியின் பெயரின் மாறுபாடாகும். கிமு 543 இல் சிங்கள இளவரசர் சிங்கபாஹு இலங்கையை ஆக்கிரமித்தபோது இயக்கர் தலைநகரம் தாம்பபாணியில் இருந்தது. இலங்கையை செரன்தீப் என்றும் அழைத்தனர், இது சேரன்தீவின் மாறுபாடாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இலங்கையில் சேர மன்னரின் இறையாண்மையைக் குறிக்கிறது . செரன்தீப் என்பது இப்போதும் இலங்கையின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும். கிமு 543 இல் முதல் சிங்கள அரசர் விஜய பாகுவின் வருகைக்கு முன்பே, பல நாகர்கள் இயக்கருடன் சேர்ந்து இலங்கையில் வசித்து வந்தனர்.

    நாகத்தீவு

    மூன்றாவது தமிழ் சங்க காலத்தில், இலங்கை நாகநாடு அல்லது நாகத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரம்பகால நாகர்கள் பெரும்பாலும் சிங்களவர்களுக்கு எதிராக இயக்கருடன் கைகோர்த்தனர். கங்கை நதிப் படுகையில் தோன்றிய புத்த மத நாகர்களின் நாடு இலங்கை ஆகும்.

    புத்த மதத்தின் எழுச்சி

    இலங்கைக்கு குடிபெயர்ந்த நாகர்களில் பலர் ஏற்கனவே பௌத்தர்களாக இருந்திருக்கலாம். அசோகரின் சந்ததிகள் மகேந்திரா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் கி.பி 250 இல் அனுராதபுரத்திலிருந்து ஆட்சி செய்த தேவனாம்பியா திஸ்ஸா (கிமு 250 முதல் கிமு 210 வரை) காலத்தில் இலங்கைக்கு வந்தபோது பெரும்பாலான இலங்கையர்கள் புத்த மதத்திற்கு மாற்றப்பட்டனர்.

    இயக்கர் நாகப் போர்கள்

    பழங்குடி இயக்கர் மக்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டு அடக்கப்பட்டனர். திமிலர் என்று அழைக்கப்படும் இயக்கர் வம்ச மீனவர்களும் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் இறுதியாக கி.பி 12 ஆம் நூற்றாண்டில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பட்டாணிகளின் உதவியுடன் திமிலர் படுகொலை செய்யப்பட்டனர்.

    கேரளாவுக்கு இயக்கர் இடம்பெயர்வு

    பல இயக்கர்கள் பண்டைய காலத்தில் கேரளாவிற்கு குடிபெயர்ந்தனர். ஈழ இயக்கர் வில்லவர் குலங்களால் நிறுவப்பட்ட சேர வம்சத்தின் துணை குலமாக ஆனார்கள். காக்கநாடு, குமாரநல்லூர் மற்றும் புனலூர் பகுதிகளை இயக்கர்-யக்கர் பிரபுகள் ஆண்டனர். எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள காக்கநாடு கோவிலில் ஈழ இயக்கர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    ReplyDelete
  24. நாகர்

    அஹிச்சத்திரம் நாகர்கள் (கி.பி. 345)

    கர்நாடகாவில் உள்ள கடம்ப நாட்டில் மயூராஷர்மா என்ற பிராமணர் அரசராகி தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றிக்கொண்டார். மயூரவர்மா தன்னை பலப்படுத்த ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும் கி.பி 345 இல் உத்தரபாஞ்சால நாட்டின் பண்டைய தலைநகராக இருந்த அஹிச்சத்திரத்திலிருந்து அழைத்து வந்தார். இந்த நாக அடிமைப் போர்வீரர்கள் பந்தரு(பிணைக்கப்பட்ட அடிமைகள்) என அழைக்கப்பட்டனர்.

    இந்த நாகர்கள் நேபாளத்தின் நேவார் மக்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். பிற்கால நாயர் கட்டிடக்கலை நேவார் கட்டிடக்கலையை ஒத்திருந்தது. நேவார்களும் முன்னதாகத் தாய்வழி வாரிசுரிமைப் பழக்கத்தை மேற்கொண்டனர். மயூரவர்மா அவர்களை கரையோர கர்நாடகத்தில் குடியேற்றினார். இந்த நாகர்கள் பாண்டா (பாணா) என அழைக்கப்படும் உள்ளூர் பாண குலங்களுடன் கலந்தனர். இறுதியில் இருவரும் பண்ட் என்று அழைக்கப்பட்டனர். நாயர் உட்பட்ட பண்டுகள் மங்களூரில் ஆலுபா ராஜ்ஜியத்திற்கு சேவை செய்து வந்தனர்.

    கங்கர் மற்றும் கொங்கர்

    கங்கர் அல்லது கொங்கர் (கவுடா கவுண்டர்) எனப்படும் கங்கை பகுதி விவசாயிகள் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். கவுடா என்பது கங்கைக்கு மாற்று பெயர் ஆகும். தமிழ்நாட்டில் அவர்கள் கொங்கு என்று அழைக்கப்படுகிறார்கள். கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவன் கொங்கு மக்களை தோற்கடித்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிட்டது. கி.பி 350 இல் சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்புக்குப் பிறகு கர்நாடகாவில் மேற்கு கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    மேற்கு கங்கை மன்னர் அவினிதாவின் ஆட்சியின் போது (கி.பி. 469 முதல் கி.பி. 529 வரை) கொங்கு கங்க வம்சத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது மற்றும் கொங்கு வேளாளர் கிபி ஆறாம் நூற்றாண்டில் கொங்குவில் குடியேறினார்கள். கொங்கு பிரதேசத்தை இழந்த சேர வம்சம் தங்கள் தலைநகரை கரூரில் இருந்து கொடுங்கலூருக்கு மாற்றியது. கொங்கு வேளாளர்கள் இன ரீதியாக கர்நாடகத்தின் கவுடா, கங்காதிகார் என்னும் வொக்கலிகருடன் தொடர்புடையவர்கள். அவர்கள் கர்நாடகாவின் லிங்காயத்துகளுடன் மதபரமாய தொடர்புடையவர்கள். எனவே அவர்கள் லிங்காய கவுண்டர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் வெள்ளாளர் மற்றும் பிற நாகர்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்ல. கொங்கு வேளாளர் சேர வம்சத்தின் வில்லவர்களின் எதிரிகளாயிருந்தனர்.

    நாக்பூர்

    நாக்பூர் நாகர்களின் மையமாக கருதப்படுகிறது. ஆனால் வட இந்தியாவில் நாகர்கள் கீழ் மட்டத்தில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வட இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நாகர் சகாக்களைப் போலல்லாமல், கேரளா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள நாகர்கள் அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானகங்களுடன் கூட்டணி வைத்து தங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டார்கள் ஆனால் உள்ளூர் திராவிட வில்லவர் கலாச்சாரத்தை அழித்தனர்.

    ReplyDelete
  25. நாகர்

    நாகர்களின் எழுச்சி

    12 ஆம் நூற்றாண்டு வரை துளுநாட்டில் அஹிச்சத்திரம் நாகர்கள், அதாவது நாயர்கள் தங்களுடைய துளு மன்னர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர். இதேபோல தமிழ்நாட்டில் வெள்ளாளர், கள்ளர், மறவர் மற்றும் அகம்படியார் ஆகிய கங்கை நாகர்கள் சோழர் மற்றும் பாண்டிய அரசர்களுக்கு அடிபணிந்து சேவை செய்து வந்தனர்.

    ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களின் வருகை நாகர்களை கணிசமாக மாற்றியது. வட இந்தியாவில் நாக வேர்கள் கொண்ட பலர் துருக்கிய சுல்தானின் படைகளில் சேர்ந்தனர்.

    துளு படையெடுப்பு

    கி.பி 1102 இல் கேரளாவின் இந்து வில்லவர் மன்னர்கள் பாணப்பெருமாள் என்ற துளு புத்த இளவரசரின் அச்சுறுத்தலை எதிர்கொண்டனர். கேரளாவில் ஒரு கடல் தளம், துறைமுகம் மற்றும் ஒரு குடியேற்றத்தை நிறுவ விரும்பிய அரேபியர்களால் பாணப்பெருமாள் ஆதரிக்கப்பட்டார். உடனடி துளு படையெடுப்பை எதிர்கொண்ட, கொடுங்கலூரில் ஆட்சி செய்து வந்த சேர வம்சம் அதன் தலைநகரை கி.பி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றியது. கி.பி 1120 இல் ஆலுபா வம்சத்தின் அரசர் கவி ஆலுப்பேந்திராவின் சகோதரர் பாணப்பெருமாள் 350000 எண்ணமுள்ள வலுவான நாயர் இராணுவத்துடன் கேரளா மீது படையெடுத்தார். உண்மையில் இது துளுநாட்டிலிருந்து கேரளாவிற்கு நாயர்களின் ஒரு பெரிய இடம்பெயர்வு ஆகும்.

    பாணப்பெருமாள் மலபார் மீது படையெடுத்து, வட கேரளாவை போரில்லாமல் ஆக்கிரமித்தார்.

    சேர வம்சம் சக்திவாய்ந்த கடற்படையுள்ள அராபியர்களுடனும் மற்றும் அவர்களின் தோழர்களான துளு-நேபாள நாகர்களுடனும் போர் செய்ய விரும்பவில்லை.

    பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தனது தலைநகரை நிறுவினார். அதன்பிறகு அவர் கி.பி 1102 இல் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து ஆட்சி செய்தார்.

    பாணப்பெருமாள் மற்றும் அவரது மருமகன்கள் சிலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பல நாயன்மார்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாறினர் மற்றும் மலபாரில் ஒரு தாய்வழி முஸ்லீம் சமூகம் நிறுவப்பட்டது. கி.பி 1156 இல் மலபாரைப் பிரித்து தனது மகன் உதயவர்மன் கோலத்திரி மற்றும் அவரது சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த அவரது மூன்று மருமகன்களுக்கும் கொடுத்துவிட்டு பாணப்பெருமாள் அரேபியாவுக்குச் சென்றார். இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் அரேபிய ஆதரவுடன் ஒரு பெரிய நாயர் மக்கள் கேரளாவுக்குள் நுழைந்தனர். பதினாறாம் நூற்றாண்டு வரை அரேபியர்கள் அவர்களைப் பாதுகாத்து வந்தனர்.

    நாயர்கள்

    நாயர்கள் அஹிச்சத்திரம் நாகர்கள் ஆவர், அவர்கள் தாய்வழி வாரிசுரிமை மற்றும் பலகணவருடைமை போன்ற பல நாக பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். நாயர்களுக்கு சர்ப்பக்காவு என்று அழைக்கப்படும் ஏராளமான பாம்பு கோவில்கள் இருந்தன, அங்கு அவர்கள் உயிருள்ள பாம்புகளை வழிபட்டனர்.
    நாயர்கள் துளுநாட்டின் பண்ட் சமூகத்துடன் தொடர்புடையவர்கள் ஆனால் இன ரீதியாக மற்ற மலையாளிகளுடன் தொடர்புடையவர்கள் அல்லர். கேரளாவில் அவர்கள் வேளாளர் மற்றும் பணிக்கர் போன்ற தமிழ் குலங்களுடன் கலந்தனர்.

    நாயர் பிரபுக்கள் மாடம்பி (மாட + நம்பி) என்று அழைக்கப்பட்டனர், ஏனெனில் இமயமலையில் அஹிச்சத்ரா மாடஸ்தானா (உயர்ந்த இடம்) அவர்கள் பிறந்த இடம் ஆதலால்.

    ReplyDelete
  26. நாகர்

    கிபி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 இல், மாலிக் காஃபூர் தலைமையிலான இரண்டு லட்சம் வீரர்களுடன் டெல்லியின் படைகள் பாண்டிய இராச்சியத்தைத் தாக்கியது. திருச்செங்கோட்டைச் சுற்றி பாண்டியப் படைகள் நிலைகொண்டிருந்த சாணாரப் பாளையம் மற்றும் பணிக்கர் பாளையம் ஆகியவை உள்ளன. ஐம்பதாயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு இராணுவத்தை மட்டுமே கொண்ட பாண்டிய இராச்சியம் தோற்கடிக்கப்பட்டது. பின்வரும் காலகட்டங்களில், டெல்லியின் படைகள் வில்லவர்களை வேட்டையாடி அவர்களை கொன்று குவித்தன. பல வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர், மற்றவர்கள் இலங்கைக்குச் சென்றனர்.

    டெல்லி சுல்தானகத்துடன் நாகர்களின் கூட்டணி

    களப்பிரர் பரம்பரை கொண்ட பல நாகர்கள் அந்த காலத்தில் இஸ்லாமிய மதத்தவராக மாற்றப்பட்டனர். இதன் மூலம் வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்கள் சோழர் குல மற்றும் பாண்டிய குல நிலங்களை ஆக்கிரமிக்க முடிந்தது.

    கி.பி 1310 இல் பாண்டிய வம்சம் மாலிக் காஃபூரால் தோற்கடிக்கப்பட்ட பிறகு நாகர்கள், உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்பட்டனர். சூத்திரர்களான நாகர் பூர்வீக வில்லவர் மக்களை விடவும் உயர்த்தப்பட்டனர். அதுவரை கேரளா மற்றும் தமிழ்நாடு வில்லவர் குலங்களால் ஆளப்பட்டிருந்தது. இதற்குக் காரணம், பெரும்பாலான நாகர்கள் டெல்லியில் இருந்து வந்த படையெடுப்பாளர்களுடன் கூட்டணி வைத்திருந்தனர் மற்றும் பல நாகர்கள் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். கி.பி 1377 இல் விஜயநகர நாயக்கர் ஆட்சி அமைத்த பிறகு பல கள்ளர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கள்ளர்கள் விருத்தசேதனம் போன்ற சில இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்தனர்.

    மதுரை சுல்தானகம் (கி.பி 1335 முதல் கி.பி 1377 வரை)

    மதுரை சுல்தானகம் 1335 இல் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா-நம்பூதிரி வம்சங்களுக்கு வழங்கப்பட்டது. இது போரில்லாமல் மீண்டும் கேரளா முழுவதும் நாயர்களுக்கு அதிகாரம் அளித்தது. இதனால் நாயர்கள் அரேபியர்கள், டெல்லி சுல்தானகம் மற்றும் மதுரை சுல்தானகங்களின் கூட்டாளிகளாக மாறி, எந்தப் போரிலும் ஈடுபடாமல் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை நிறுவினர்.

    தமிழகத்தில் கள்ளர்களும் வெள்ளாளர்களும் மதுரை சுல்தானகத்தின் கூட்டாளிகளாக இணைந்தனர் மற்றும் பலர் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். அந்தக் காலத்தில் கள்ளர், மறவர், அகம்படியார் மற்றும் வெள்ளாளர் ஆகியோர் வில்லவர் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பரசுராமன்

    நம்பூதிரிகள் பரசுராமன் தனது கோடரியை வீசி கேரளாவை கடலில் இருந்து உருவாக்கி தங்களுக்கு கொடுத்ததாக கூறினார்கள். முந்தைய தமிழ் சேர வம்ச காலத்தில் பரசுராமனைப்பற்றி புத்தகங்கள் அல்லது கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. இது வில்லவர் மக்களின் திராவிட நிலங்களைக் கோருவதற்கான நம்பூதிரிகளின் சூழ்ச்சி ஆகும். திரேதா யுகத்தில் கிமு 2,163,102 முதல் கிமு 867,102 வரை வாழ்ந்த பரசுராமன் ஹைஹயா ராஜ்யத்திற்கு தெற்கேயோ அல்லது நர்மதா நதிக்கு தெற்கேயோ செல்லவில்லை.

    உண்மையில் கேரளா நம்பூதிரிகளுக்கு மாலிக் காஃபூரால்தான் வழங்கப்பட்டது. கி.பி 1120 இல் துளு-நேபாள பிராமணர்களை அரேபியர்கள் கேரளாவிற்குள் அழைத்து வந்தனர். கி.பி 1310 இல் பாண்டிய வம்சத்தை தோற்கடித்த மாலிக் காஃபூர் கேரளாவை நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களின் துளு-நேபாள வம்சங்களின் ஆட்சிக்கு வழங்கினார். இது கேரளாவில் அஹிச்சத்திரம் நாகர்களின் ஆதிக்கத்திற்கு வழிவகுத்தது.


    நான்கு துளு-நேபாள அரசுகள் (1335)

    நான்கு துளு சாமந்த ராஜ்யங்கள் நிறுவப்பட்டன, நம்பூதிரிகளுக்கு இளவரசிகளுடன் சம்பந்தம் செய்வதற்கான உரிமை இருந்தது. இவ்வாறு இந்த வம்சங்கள் துளு சாமந்தா+நம்பூதிரி வம்சங்கள் ஆகின்றன.

    1. கோலத்திரி வம்சம்
    2. சாமுத்திரி வம்சம்
    3. கொச்சி வம்சம்
    4. ஆற்றிங்கல் ராணி வம்சம்

    சிறிய நாயர் ராஜ்ஜியங்கள்

    வள்ளுவநாடு, பாலக்காடு மற்றும் தெக்கும்கூர் அரசர்கள் நாயர்கள் ஆவர்.

    வள்ளுவ கோனாத்திரி

    வள்ளுவ கோனாத்திரி மூப்பில் நாயர் வள்ளுவநாடு மன்னர். ஒவ்வொரு 12 வருடங்களிலும் மாமாங்கம் திருவிழாவின் போது வள்ளுவநாடு நாயர்கள் பட்டாம்பி அருகே உள்ள உற்சவபரம்பில் சாமுத்திரி மன்னரைக் கொல்ல முயன்றனர்.

    தரூர் ஸ்வரூபம்

    தரூர் ஸ்வரூபம் சேகரி வர்மா என்றழைக்கப்படும் நாயர் மன்னர்களால் ஆளப்பட்ட பாலக்காடு இராச்சியம் ஆகும். கி.பி 1335 -க்கு முன்பு அவர்கள் மலப்புறம் மாவட்டத்தின் பொன்னானி தாலுக்கில் உள்ள ஆதவநாட்டில் இருந்தனர்.

    ReplyDelete
  27. நாகர்

    சேர கோவில்களின் ஆக்கிரமிப்பு (கி.பி 1335)

    கி.பி 1335 இல் சேர கோவில்கள் நாகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. கி.பி 1339 க்குப் பிறகு வில்லார்வட்டம் மன்னர் மற்றும் அவரது பணிக்கர்கள் கிறிஸ்தவர்களாக மாறியது கிமு 1340 இல் சேந்தமங்கலம் மீது சாமுத்திரி மற்றும் அரேபியர்களின் தாக்குதலைத் தூண்டியது. பாதி வில்லவர்கள் இலங்கைக்குச் சென்று புத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். மீதமுள்ள இந்துக்களில் 45 சதவீதம் பேர் மற்ற மதங்களுக்கு மாறினர். கண்ணகி வழிபாடு உட்பட திராவிட இந்து மதம் முடிவுக்கு வந்தது. உயிருள்ள நாக வழிபாடு உட்பட்ட நேபாள பாணி இந்து மதம் கேரளாவில் தோன்றியது.

    வில்லவர்களின் வெளியேற்றம் (கி.பி 1350)

    வில்லவர்களை தொடர்ந்து டெல்லி ராணுவம் கொன்று குவித்தது. வில்லவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சமடைந்தனர். செங்கோட்டை அருகே உள்ள சாணார் மலை அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு வில்லவர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு காட்டுப் புகலிடமாக இருந்தது. கேரளாவில் இருந்து பல வில்லவர் பணிக்கர்கள் இலங்கைக்கு சென்றனர்.

    கி.பி 1350 முதல் 1600 வரை, கேரளாவின் பணிக்கர் படைகள் இலங்கையின் மூன்று ராஜ்யங்களுக்கு அதாவது கோட்டை, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ராஜ்யங்களுக்கு சேவை செய்தன. பணிக்கர்கள் புத்த மதத்திற்கு மாறி தங்கள் தனித்துவத்தை இழந்தனர்.

    வஞ்சிபுரா அதாவது கொல்லத்திலிருந்து சென்ற அழகக்கோனார் கொழும்பு கோட்டையைக் கட்டினார். அவர் கொல்லத்தின் பழைய பெயரான கோளம்பம் என்று அதற்குப் பெயரிட்டார். அவரது மகன் கம்போலாவைவின் வீர அழகேஸ்வரர் கி.பி 1387 முதல் 1411 வரை கொழும்புக்கு அருகிலுள்ள கம்போலாவை ஆட்சி செய்தார். அழககோனாரா குடும்பமும் புத்த மதத்தை ஏற்றுக்கொண்டது.

    சதாசிவ பணிக்கன் யானை பயிற்சியாளராக கோட்டே ராஜ்யத்தில் சேர்ந்தார். சதாசிவப்பணிக்கன் கோட்டே அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அவரது மகன் செண்பகப்பெருமாள் கோட்டே மற்றும் யாழ்ப்பாண அரசுகளின் ஆட்சியாளரானார், மேலும் கோட்டேயின் புவனேகபாஹு VI (கி.பி. 1469 முதல் கிபி 1477 வரை) என்ற அரச பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

    வில்லவர் படைகள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தது மற்றும் புத்த மதத்திற்கு அவர்களின் மத மாற்றம் இந்தியாவின் வில்லவர் மக்களை மேலும் பலவீனப்படுத்தியது.

    கேரளாவைச் சேர்ந்த தமிழ் வீரர்கள் அவர்களின் தனித்துவமான சிகை அலங்காரத்தின் காரணமாக கொண்டைக்கார தமிழர் என்று அழைக்கப்பட்டனர்.

    கி.பி 1335 க்குப் பிறகு இயக்கர் நிலைப்பாடு

    கேரளாவைச் சேர்ந்த ஈழ இயக்கர் மக்கள் நாக படையெடுப்பாளர்களுடன் சண்டையிடவில்லை, அவர்கள் ஒரு கீழான நிலையை ஏற்றுக்கொண்டனர். வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த சிலர், வில்லவர், பணிக்கர்கள் மற்றும் சண்ணார் ஆகியோர் ஈழ இயக்கருடன் சேர்ந்தனர், அவர்கள் அவர்களின் தலைவர்கள் ஆனார்கள். இவை வில்லவர்களை கணிசமாக பலவீனப்படுத்தியது மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை பறித்தது.

    ReplyDelete
  28. நாகர்

    விஜயநகர நாயக்கர் தாக்குதல் (கி.பி. 1377)

    குமார கம்பண்ணனின் கீழ் வந்த விஜயநகர தாக்குதல் மதுரை சுல்தானை தோற்கடித்து வெளியேற்றியது. விஜயநகர காலத்தில் கள்ளர்களில் பலர் இந்து மதத்திற்கு திரும்பினர். ஆனால் பல கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பல இஸ்லாமிய பழக்கவழக்கங்களை தக்கவைத்துக்கொண்டனர்.

    1. விருத்தசேதனம்
    பிறமலைக்கள்ளர் சிறுவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருந்து மற்றும் கொண்டாட்டத்துடன் விருத்தசேதனம் செய்து வந்தனர்
    2. கள்ளர் திருமணங்களில் மணமகன் தாலி கட்ட மாட்டார் ஆனால் அவரது சகோதரிதான் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார்.
    3. கள்ளர் தாலி பிறை மற்றும் நட்சத்திரக் குறியைக் கொண்டுள்ளது.

    வாணாதிராயர்

    விஜயநகர நாயக்கர்கள் மதுரையின் ஆட்சியாளர்களாக ஆந்திரபிரதேசத்தில் பாண சாம்ராஜ்யத்தின் பாணர்களை நியமித்தனர். மகாபலி வாணாதிராயர்கள் பாண்டியர்கள் போல் நடித்தனர். தொல் மகாவிலி வாணாதிராயர் என்று அழைக்கப்படும் ஒரு பாண தலைவர் பதினைந்தாம் நூற்றாண்டில் விஜயநகர தளபதி விட்டலாவால் பாண்டிய சிம்மாசனத்தில் வைக்கப்பட்டார். ஒரு வாணாதிராயர் தன்னை பாண்டியகுலாந்தகன் அல்லது பாண்டியன் வம்சத்தை அழிப்பவர் என்று அழைத்து கொண்டார். வாணதிராயர்கள் (வன்னியர், வாணவராயர், வாணகோவரையர்) தமிழ்நாட்டின் நாகர்களின் தலைவராக நியமிக்கப்பட்டனர். வாணாதிராயர்கள் இனரீதியாக தெலுங்கு பலிஜா நாயக்கர்களுடன் தொடர்புடையவர்கள் ஆனால் எந்த நாக குலத்துடனும் தொடர்புடையவர்கள் அல்ல. பின்னர் பல்வேறு நாக குலங்களின் தலைவர்களாக இருந்த இந்த வாணாதிராயர்கள் மதுரை நாயக்கர் ஆட்சியில் பாளையக்காரர்கள் ஆனார்கள். இந்த வாணாதிராயர்கள் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தினர். நாகர், களப்பிரர் மற்றும் துளுவ வெள்ளாளர்களும் தேவர் பட்டத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.

    விஜய நகர நாயக்கர்கள் வாணாதிராயர்களை நாக குலத் தலைவர்களாக திறம்பட உருவாக்கி, தமிழ்நாட்டின் நாக குலங்களைக் கட்டுப்படுத்தினர் மற்றும் நாகப் படைகளைப் பயன்படுத்தி வில்லவர் வம்சங்களை எதிர்த்தனர்.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள்

    தமிழகம் மற்றும் கேரளாவின் உரிமையாளர்கள் வில்லவர்கள் ஆவர் மற்றும் கர்நாடகா மற்றும் ஆந்திரபிரதேஷின் சரியான உரிமையாளர்கள் பாணர்கள் ஆகும். வில்லவர் மிகப்பழங்காலத்திலிருந்தே தமிழகத்தை ஆண்டு வந்தனர். பாணர் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் மற்றும் வில்லவர்களின் பரம எதிரிகள் ஆவர்.

    கி.பி 1310 இல் மாலிக் காஃபூர் பாண்டிய ராஜ்யத்தை தோற்கடித்தார், இது கேரளாவில் (1335) துளு பாண-நேபாள ஆட்சிக்கு வழிவகுத்தது, மேலும் தமிழ்நாட்டில் பலிஜா (பாண) நாயக்கர் ஆட்சிக்கு வழிவகுத்தது (1377). இது கேரளாவில் நேபாள நாகர்களின் எழுச்சிக்கும், தமிழ்நாட்டில் கங்கை நதி நாகர்களின் உயர்வுக்கும் வழிவகுத்தது.

    ஐரோப்பிய காலனித்துவ ஆட்சியாளர்கள் தில்லி சுல்தானியர்களின் உத்தியாகிய உள்நாட்டு திராவிட வில்லவர்களை ஒடுக்குதல் மற்றும் நாகர்களை உயர்த்துவதற்கான உத்தியை உடனடியாக ஏற்றுக்கொண்டனர். போர்த்துகீசியர்கள் வட இந்திய ஆரிய நாகர் மற்றும் கேரளாவில் உள்ள வெளிநாட்டு இரத்தம் கொண்ட கிறிஸ்தவர்களுக்கும் ஆதரவளித்தனர். டச்சு மற்றும் ஆங்கிலேயர்கள் தில்லி சுல்தானகத்தின் அதே உத்தியைப் பின்பற்றினர்.

    பெரும்பாலான காலனித்துவ நிர்வாகிகள் வட இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள். 450 ஆண்டுகள் நீண்ட ஐரோப்பிய காலனித்துவ காலம் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள நாகர்களுக்கு பொற்காலமாக இருந்தது. நாகர்கள் தென்னிந்தியாவிற்கு அடிமைகளாக அல்லது அகதிகளாக வந்திருந்தனர். நாகர்கள் தென்னிந்தியாவில் தொழிலில் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் அல்லது அடிமை வீரர்களாகவும் இருந்தனர். ஆனால் 1335 ற்கு பிறகு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் மற்றும் ஐரோப்பியர்களின் உதவியுடன் நாகர்கள் உண்மையில் தென்னிந்தியாவை ஆட்சி செய்தனர்.

    கேரளாவின் துளு-நேபாள ஆட்சியாளர்களை போர்த்துகீசியர்கள் ஆதரித்தனர். தில்லி சுல்தானியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு பதிலாக ஐரோப்பியர்கள் கேரளாவின் நாகர்களின் பாதுகாவலர்களாக மாறினர். கேரளாவில் உள்ள நாகர்களை ஐரோப்பியர்கள் 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். நாகர்கள் ஐரோப்பிய உதவியுடன் சுதந்திரம் அடையும் வரை தங்கள் உயர் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

    அரேபியர்கள், டெல்லியின் துருக்கிய சுல்தான்கள் மற்றும் ஐரோப்பியர்கள் போன்ற வெளிநாட்டு மாலுமி வணிகர்கள் மற்றும் படையெடுப்பாளர்கள் கேரளாவின் பூர்வீக வில்லவர் தமிழ் ஆட்சியாளர்களை விட பூர்வீகமற்ற துளு-நேபாள நாக-சாமந்தா குலங்களை விரும்பினர்.

    தமிழ்நாட்டில் போர்ச்சுகீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் பல நாகர்களை குறிப்பாக மறவர் மற்றும் வேளாளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றினார்கள். ஆற்காடு நவாப்பின் கூட்டாளிகளாக வந்த ஆங்கிலேயர்கள் நாகர்களை உயர்த்துவது மற்றும் வில்லவர்களை ஒடுக்குவது போன்ற முஸ்லீம் படையெடுப்பாளர்களின் கொள்கைகளைப் பின்பற்றினர்.

    ReplyDelete
  29. நாகர்

    சுல்தான்கள் மற்றும் ஆங்கிலேயர்களுடன் நாகரின் கூட்டு

    யூசுப் கான் என்ற மருதநாயகம் பிள்ளை

    மருதநாயகம் பிள்ளை (கி.பி 1725 முதல் 1764 வரை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் இராணுவத்தின் வெள்ளாள தளபதி ஆவார். அவர் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு யூசுப் கான் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார், இதனால் அவர் சந்தா சாஹிப் என்ற ஆற்காடு நவாப் மற்றும் ஹைதராபாத் நிஜாமின் நம்பிக்கையைப் பெற முடிந்தது.

    யூசுப் கான் ஒரு போர்த்துகீசிய கிறிஸ்துவர் ஆகிய மார்சியா அல்லது மார்ஷா என்ற லூசோ-இந்தியப் பெண்ணை மணந்தார். ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்வதன் மூலம் அவர் தனது குடும்பத்தை கிறிஸ்தவர் என்று பிரிட்டிஷாரை நம்ப வைத்தார். பிரிட்டிஷார் அவரை மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு வரி வசூலிப்பவராக நியமித்தனர்.

    ஆனால் மருதநாயகம் பிள்ளை தனது பிரிட்டிஷ் எஜமானர்களுக்கு துரோகம் செய்ய முயன்றபோது அவரை தூக்கிலிட்டனர். பிரிட்டிஷார் அவரது மகனை கிறிஸ்தவராக வளர்த்தனர்.

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் எனப்படும் ஷேக் முஹம்மது ஆயாஸ் கான்

    வெள்ளுவக்கம்மாரன் நம்பியார் (1713 முதல் 1799) இஸ்லாம் மதத்திற்கு மாறிய ஹைதர் அலியின் தளபதி ஆவார். ஆயாஸ் கான் ஒரு ஹைதர் அலியின் தத்தெடுத்த மகன் போல மற்றும் நம்பகமான சேவகரும் ஆனார். சித்ரதுர்காவின் ஆளுநராக ஆயாஸ் கான் நியமிக்கப்பட்டார்.

    1778 இல் ஆயாஸ் கான் பெட்னூர் கோட்டையின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1782 ல் ஆயாஸ் கான் ஆங்கிலேயர்களுடன் சதி செய்து பெட்னூர் கோட்டையை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தார். சரணடைந்த பிறகு அவர் பம்பாயில் பிரிட்டிஷ் ஓய்வூதியதாரராக வாழ்ந்தார்.

    திராவிட மலையாளமாகிய மலையாண்மையின் முடிவு

    நாயர்களின் சிறந்த நண்பர்களில் பிரிட்டிஷாரும் இருந்தனர். பெஞ்சமின் பெய்லி மற்றும் ஹெர்மன் குண்டர்ட் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் பேசும் கிரந்த-மலையாளத்தைப் படித்தனர், அவை நேபாள சொற்களஞ்சியத்தைக் கொண்டிருந்தன. அவர்கள் கி.பி 1815 முதல் கிறிஸ்தவர்களின் ஒத்துழைப்புடன் நேபாள கலப்பு மலையாளத்தை ஊக்குவிக்கத் தொடங்கினர். அதனுடன் மலையாளத்தின் திராவிட வடிவமாகிய மலையாண்மை மொழி மற்றும் அதில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வழக்கற்றுப் போய்விட்டன. கட்டிடக்கலை, கப்பல் கட்டும் கலை, தாவரவியல், மருத்துவம், செய் வினை போன்ற பல்வேறு பாடங்களில் உண்டாயிருந்த திராவிட மொழியாய மலையாண்ம புத்தகங்கள் எதுவும் பிரிட்டிஷ்காரர்களால் மொழிபெயர்க்கப்படவில்லை. நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளால் பதினாறாம் நூற்றாண்டிலிருந்து
    மந்தார ராமாயணம், பாகவதோ போன்ற துளு புத்தகங்களை மலையாளத்தில் தழுவி மீண்டும் எழுதப்பட்ட புத்தகங்கள் ஆரம்பகால மலையாள புத்தகங்களாகப் போற்றப்பட்டன.

    பல பாலக்காடு நாயர்கள் பிரிட்டிஷாரின் கீழ் உயர் பதவிகளை வகித்தனர் மற்றும் மாலை நேரங்களில் சுதந்திரப் போராளிகளாக இரட்டிப்பாகினர். இதனால் பிரிட்டிஷ்காரர்களுக்கு சுதந்திர இயக்கத்தை திறம்பட கட்டுப்படுத்த முடிந்தது.

    பிரிட்டிஷார் மெட்ராஸின் கிறிஸ்தவக் கல்லூரிகளை தங்கள் நண்பர்களுக்கு கல்வி கற்பதற்காகப் பயன்படுத்தினார்களே தவிர உண்மையான கிறிஸ்தவர்களுக்காக அல்ல.

    சேர சோழ பாண்டியன் ராஜ்யங்களின் உரிமையாளர்களாக வில்லவர் மக்களை பிரிட்டிஷார் ஒருபோதும் அங்கீகரித்ததில்லை. பிரிட்டிஷ் அறிஞர்களும் மிஷனரிகளும் வில்லவர் மக்களை கேலி செய்தனர். நேர்மையற்ற ஆங்கிலேயர்கள் நாகர்களின் தலைவர்களாக இருந்த வாணாதிராயர்களையும் நாயக்கர்களையும் பொலிகர்களையும் பாதுகாத்தனர்.

    எனினும் பிரிட்டிஷார் தமிழ்நாட்டின் கள்ளர் மற்றும் மறவர் ஆகியோரை கிபி 1911 இல் குற்றப் பரம்பரையினராக அறிவித்தனர்.

    ReplyDelete
  30. நாகர்

    சுதந்திரத்திற்கு பிந்தைய காலம்

    கேரளாவைச் சேர்ந்த பெரும்பாலான முதலாளித்துவ நாகர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு தங்களை பாட்டாளி வர்க்கமாக அறிவித்தனர். இந்த உத்தி மூலமே கோலத்திரி மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நாயர் கேரளாவின் முதல்வரானார். கேரளாவின் மக்கள் தொகையில் நாயர்கள் சுமார் 14 சதவிகிதம் உள்ளனர். திருவனந்தபுரம் கொல்லம் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் அவர்களின் கோட்டைகள். ஆனால், திருவனந்தபுரத்தில் நாடார்கள் நாயர்களை விட அதிகமாக உள்ளனர். கண்ணூரில் தீயர்களும், கொல்லத்தில் ஈழவரும் மற்றும் கோழிக்கோட்டில் முஸ்லிம்களும் நாயர்களை விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பிறகு, பல பணக்கார நாயர்கள் வட மைய இந்தி பேசும் மக்களாக மாறினர். அவர்கள் மையத்தில் ஒரு சக்திவாய்ந்த லாபியைக் கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தம் முற்றிலும் சந்தர்ப்பவாதமானது, அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக மாறுகிறார்கள்.

    தற்போது பல நாயர்கள் குறிப்பாக மேனன்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல கிறிஸ்தவ நாயர் சுவிசேஷகர்கள், ரெவரெண்ட் போதகர்கள், ஆயர்கள் தோன்றத் தொடங்கினர். இப்போது பல நாயர் கிறிஸ்தவ பாதிரியார்கள் துபாய், கத்தார், இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். அவர்கள் அடிக்கடி தங்கள் சொந்த தேவாலயங்களை நிறுவிக்கொள்கிறார்கள்.

    தமிழ்நாட்டில் நாகர்கள் திராவிடர்களாக வேடமிடுகிறார்கள், உண்மையான திராவிடர்களாகிய வில்லவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். கள்ளர், மறவர் மற்றும் அகமுடையார் (10%) வெள்ளாளர் (3%) முதலியார் (2%) ஆகியோர் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 15 சதவீதம் வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அவர்களிடமிருந்து வந்தவர்கள். பெரும்பாலான முக்கிய துறைகளுள்ள அமைச்சர்களும் நாகர் குலத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான திராவிட ஆதரவு கட்சிகள் உண்மையில் நாகர் மேம்பாட்டு கட்சிகளாகும்.


    நாக மேம்பாட்டு கட்சிகள்

    திராவிடர்களை ஊக்குவிப்பதாகக் கூறும் பல திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால் அனைத்து திராவிட கட்சிகளும் மாறுவேடத்தில் இருக்கும் நாக மேம்பாட்டு கட்சிகள் ஆகும். அவர்கள் உண்மையில் கங்கை பகுதியில் இருந்து குடியேறிய நாகர்களைத்தான் ஊக்குவிக்கிறார்கள்.

    ______________________________________________

    ReplyDelete
  31. நாகரும் களப்பிரரும்
    _________________________________________


    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து நாடுகளையும் வில்லவர் போராளிகள் பாதுகாத்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    சேர சோழ பாண்டியன் நாடுகள் வில்லவர் ஆட்சியாளர்களால் ஆளப்பட்டன. வில்லவர் பண்டைய தமிழ் ஆட்சியாளர்கள் மற்றும் திராவிட க்ஷத்ரிய வம்சாவளியினர் ஆவர்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் - மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    ReplyDelete
  32. நாகரும் களப்பிரரும்

    நாகர் மற்றும் களப்பிரர் நாக பரம்பரையின் இரண்டு வட இந்திய குலங்கள், அவர்கள் பண்டைய காலத்தில் சேர சோழ பாண்டியன் நாடுகளைத் தாக்கினர்.


    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.
    மறவர் எயினர் ஓவியர் ஓளியர் அருவாளர் பரதவர் என்பவர்கள் வட இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய ஆரம்பகால நாகர்கள் ஆவர்.


    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)


    மறவர்
    மறவர் கங்கை நதியில் மீனவர்களாக இருந்ததாகவும், குஹனின் வம்சாவளியினர் என்றும் மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மறவர் அயோத்திக்கு ஸ்ரீராமரால் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு அயோத்தியில் பதவிகள் வழங்கப்பட்டன. வானரப்படையுடன் சேர்ந்து மறவர் இலங்கையை ஆக்கிரமித்து, பின்னர் ராவணனை தோற்கடித்தனர். இயக்கர் வம்ச மன்னன் இராவணனுக்கு எதிரான இந்த மறவர் வெற்றியின் காரணமாக, மறவர் அரக்கர் குலமறுத்த சிவ மறவர் குலம் என்று மட்டக்களப்பு மான்மியத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

    இலங்கை
    குஹன்குலத்தோர்
    இலங்கையும் நாக குலத்தாரால் ஆக்கிரமிக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நாகர்கள் இலங்கைக்கு பெரிய அளவில் குடியேறியதால் அது நாக தீவு என்றும் அழைக்கப்பட்டது. கிமு 543 இல் சிங்கள வம்சத்தை நிறுவிய சிங்கள இளவரசர் விஜயன் படையெடுப்பதற்கு முன்பே இந்த நாகர்களின் இடம்பெயர்வு தொடங்கியிருக்கலாம்.
    கரையர் இலங்கையின் ஆரம்பகால குடியிருப்பாளர்கள் என்று மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இதற்குப் பிறகு குஹன்குலத்தோர் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் குடியேறினர். குஹன்குலத்தோரின் மூன்று குலங்கள் கலிங்கர், சிங்கர் மற்றும் வங்கர் என்றும் அவர்கள் இலங்கை மற்றும் ராம்நாதபுரம் பகுதிகளில் குடியேறியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. இந்த மூன்று நாக குஹன் குலங்களும் முற்குஹர் அல்லது முற்குலத்தோர் அல்லது முக்குலத்தவர் அல்லது முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியத்தின் படி, சிங்களர் மறவர் மற்றும் முற்குகர் (முக்குவர்) ஆகியோர் குஹன்குலத்தோரிலிருந்து பொதுவான தோற்றத்தைக் கொண்டிருந்தனர். எனவே அவர்கள் முற்குஹர் என்று அழைக்கப்பட்டனர்.

    மறவர்களின் வன்னியர் பதவி
    கலிங்க அரச குலத்தால் ஆளப்பட்ட கண்டி ராஜ்ஜியத்தில் சிங்களவர்களுடனான இந்த உறவின் காரணமாக, மறவர்கள் வன்னியர்களாக நியமிக்கப்பட்டனர். மட்டக்களப்பு மான்மியம் மறவர்கள் ஆண்ட ராமநாதபுரம் பகுதியை வடக்கு ஸ்ரீலங்கா என்று விவரிக்கிறது. ஆனால் வேளாளர்கள் ஆதிக்கம் செலுத்திய யாழ்பாணம் போன்ற தமிழ் பகுதிகளில், மறவர்கள் வரவேற்கப்படவில்லை மற்றும் உயர் பதவிகளை வகிக்க முடியவில்லை.

    முக்குவர்(முற்குகர்)
    மேலும் முக்குவர் போடி எனப்படும் மட்டக்களப்புப் பகுதியின் பிராந்திய ஆளுநர்களாக நியமிக்கப்பட்டனர். 1600 களில் டச்சு(ஒல்லாந்தர்) ஆட்சியின் போது எழுதப்பட்ட மட்டக்களப்பு மான்மியம் அருமக்குட்டி பொடி மற்றும் கந்தப்பொடி என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு பகுதியின் இரண்டு முக்குவர் ஆளுநர்களைக் குறிப்பிடுகிறது. மட்டக்களப்பு மான்மியம் கண்டியை ஆண்ட கலிங்க-வில்லவர் அரச குலத்திற்கு அடுத்த மிக உயர்ந்த சாதி முக்குவர்கள் என்று குறிப்பிடுகிறது. வெள்ளாளர் தலைமையிலான பதினெட்டு சாதியினர் மட்டக்களப்பில் முக்குவர் ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படிந்து மரியாதை செலுத்த வேண்டியிருந்தது.
    முக்குவருக்கு பட்டியலிடப்பட்ட சலுகைகள் கண்டிய அரச குடும்பங்களின் சலுகைகளுக்கு அடுத்ததாக இருந்தன.

    வெள்ளாளர்
    கலிங்க நாட்டிலிருந்து குடிபெயர்ந்ததால் வெள்ளாளர் கலிங்க வெள்ளாளர் என்று அழைக்கப்பட்டனர். மட்டகளப்பு மான்மியத்தின் கூற்றுப்படி, வெள்ளாளர் கலிங்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பதினெட்டு சூத்திர ஜாதியினரின் தலைவர்களாக இருந்தனர்.

    பரதவர்
    பரதவர் பலூசிஸ்தானில் உள்ள பரதராஜா நாட்டிலிருந்து கி.பி முதல் நூற்றாண்டில் பார்த்தியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்டனர். பலூச்சிஸ்தானின் மொழி சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து வந்த பிராஹுய் என்று அழைக்கப்படும் ஒரு வட திராவிட மொழியாகும். பிராஹுய் தமிழ் மொழியை ஒத்திருக்கிறது. பரதவர் தமிழ்நாட்டின் கடற்கரையில் உள்ள நெய்தல் நிலங்களை ஆக்கிரமித்தனர்.

    பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எதிராக பரதவர் கலகம் செய்தபோது, ​​அவர் அவர்களின் குலங்களை தோற்கடித்து அழித்தார்.

    ReplyDelete
  33. நாகரும் களப்பிரரும்

    களப்பிர வம்சம்

    களப்பிரர் பட்டங்கள் களப்பிரர் கலியர் கள்வர் மற்றும் களப்பாளர் வட இந்திய கல்வார் பட்டங்களை அதாவது கல்வார், கள்ளர், காலர், காலாள், கல்யாபால போன்றவற்றை ஒத்திருக்கிறது. சுமார் 250 கி.பியில் சேர சோழ பாண்டிய ராஜ்ஜியங்கள் கள்வர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது., கள்வர்களின் தலைநகரம் பெங்களூருக்கு அருகிலுள்ள நந்தி மலைகளில் இருந்தது. சில கல்வெட்டுகள் நந்தி மலைகளை ஸ்ரீ கள்வர் நாடு என்று குறிப்பிடுகின்றன. களப்பிர ஆட்சியாளர்களுக்கு சொந்தக் கொடி இல்லை ஆனால் சேர சோழ பாண்டியன் கொடிகளை பயன்படுத்தினர். களப்பிரர்கள் பாண்டியன் பட்டமான மாறன் என்பதை ஏற்றுக்கொண்டனர். இனரீதியாக சம்பந்தம் இல்லை என்றாலும் அவர்கள் தங்களை வில்லவர்கள் என்று அழைத்தனர் மற்றும் மற்ற வில்லவர் பட்டங்களை ஏற்றுக்கொண்டனர். கி.பி. 600 இல் கூன்பாண்டியனால் களப்பிரர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    இருண்ட காலம்

    கி.பி 300 முதல் கிபி 800 வரையிலான களப்பிரர் ஆட்சி பொதுவாக தமிழக வரலாற்றில் இருண்ட யுகமாக கருதப்படுகிறது. களப்பிரர் என்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான இனம், தென்னிந்தியா முழுவதையும் அழித்தது. களப்பிரர் புத்த மதத்தை ஊக்குவித்தனர் மற்றும் இந்துக்களை துன்புறுத்தினர்.
    களப்பிரர் கலியரசர் என்று அழைக்கப்பட்டனர். கள்வர் கலியர் என்றும் அழைக்கப்பட்டனர்.


    களப்பிரர் தோல்வி

    கி.பி 600 இல் கூன் பாண்டியன் களப்பிரரை தோற்கடித்து பாண்டிய பிரதேசத்திலிருந்து வெளியேற்றினார். களப்பிரர் பல்லவ மன்னராலும் தோற்கடிக்கப்பட்டனர்.
    என்றாலும் களப்பிரர் சோழ நாட்டில் தஞ்சாவூரை தலைநகராக கொண்டு கிபி 800 வரை ஆட்சி புரிந்து வந்தனர்.

    பிற்கால சோழர்
    பிற்கால சோழ மன்னர்கள் கி.பி 800 இல் களப்பிரரை தோற்கடித்து அடிபணிய வைத்து தங்கள் படையில் சேர்த்துக் கொண்டனர்.
    சோழர்களின் பல்வேறு படையெடுப்புகளில் நாக களப்பிர இராணுவத்தைப் பயன்படுத்தினர்.
    ஒரு கள்வர் படையுடன் சோழர்கள் இலங்கையையும் பர்மாவையும் தாக்கினர். இதன் காரணமாக சோழர்கள் போரில் காட்டுமிராண்டிகளாக கருதப்பட்டனர்.


    நாகர் களப்பிரர் குலங்களின் கலப்பு

    இலங்கையில் கண்டி ராஜ்யத்தில் முக்குலத்தோரின் மூன்று நாககுலங்கள் மறவர், முக்குவர் மற்றும் சிங்களர்
    ஆவர். ஆனால் தமிழ்நாடு முக்குலத்தோரில் முக்குவர் தவிர்க்கப்பட்டு, களப்பிரர் வம்ச கள்ளர், அகமுடையார்-துளுவ வேளாளர் போன்ற நாக குலங்கள் மறவருடன் சேர்க்கப்படுகின்றன.

    பாணர்
    ஆந்திராவின் பாணர்கள் வில்லவர் வம்சத்தின் வடுக உறவினர் ஆவர், அவர்கள் வில்லவர்களின் வானவர் துணைப்பிரிவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.
    நாகர்களைக் கட்டுப்படுத்த சோழ பாண்டிய மன்னர்கள் ஆந்திராவில் உள்ள பாண ராஜ்ஜியத்திலிருந்து பாணர்களைக் கொண்டு வந்து அவர்களை நாக குலங்களின் ஆட்சியாளர்களாக நியமித்தனர்.
    இந்த தெலுங்கு பாணர்கள் வாணர் அல்லது வாணாதிராயர் அல்லது வன்னியர் என்று அறியப்பட்டனர். வாணாதிராயரின் கொடி காளை கொடி அல்லது அனுமன் கொடி (வானரக்கொடி).
    சோழர்கள் கங்கை நாட்டு கலிங்க நாட்டைச் சேர்ந்த வாணாதிராயரை ராமநாடு மற்றும் கேரள சிங்க வளநாடு ஆளுநராக நியமித்தனர். இந்த வாணாதிராயருக்கு ஆரம்பத்தில் அனுமன் கொடி இருந்தது. ராமநாட்டின் வாணாதிராயர்கள் நாயக்கர்களின் கீழ் சேதுபதி மன்னர்களாக ஆனார்கள்.
    வாணாதிராயர்களின் இந்த நியமனம் சோழ பாண்டிய அரசுகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    ReplyDelete
  34. நாகரும் களப்பிரரும்

    கொங்கு வேளாளர்
    கொங்கு வேளாளர் நான்காம் நூற்றாண்டில் கங்கை ஆற்றின் கரையிலிருந்து குடிபெயர்ந்த விவசாய சமூகமாகும். அவர்கள் கங்காதிகார் என்று அழைக்கப்படும் கர்நாடகத்தின் வொக்கலிகா கவுடா சமூகத்துடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள்.

    தமிழ்நாட்டில் கொங்கு வெள்ளாளரின் தோற்றம்

    சிலப்பதிகாரத்தின் படி கொங்கு படையெடுப்பாளர்கள் முதன்முதலில் இரண்டாம் நூற்றாண்டில் தோன்றினர், ஆனால் சேரன் செங்குட்டுவனால் தோற்கடிக்கப்பட்டனர்.

    சமுத்திர குப்தரின் தெற்கு படையெடுப்பின் பின்னர் கி.பி 350 இல் இக்ஷ்வாகு மன்னர்களின் கீழ் கங்கை சமவெளியில் இருந்து குடியேறியவர்களால், தெற்கு கர்நாடகாவில், மேலை கங்கை இராச்சியம் நிறுவப்பட்டது.

    கங்கை மன்னர் அவினிதா (கிபி 469 முதல் கிபி 529 வரை) வின் ஆட்சியின் போது கொங்கு பகுதியை மேலை கங்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். கொங்கு வேளாளர்கள் கொங்கு நாட்டை ஆக்கிரமித்து கிபி ஆறாம் நூற்றாண்டில் குடியேறினர்.

    கொங்கு குலத்தாரால் அச்சுறுத்தப்பட்ட பிரதான சேர வம்சம் கரூரில் இருந்து கேரளாவில் கொடுங்களூருக்கு ஏழாம் நூற்றாண்டில் மாற்றப்பட்டது.
    உம்மத்தூர் கொங்கு சேர வம்சம் என்றழைக்கப்படும் சேரரின் ஒரு சிறிய கிளை, பதினைந்தாம் நூற்றாண்டு வரை கொங்கு பிராந்தியத்தின் சில இடங்களை ஆட்சி செய்து வந்தது.
    சேர தலைநகரம் கேரளாவுக்கு மாற்றப்பட்ட பிறகு கொங்கு நாடு சோழர்கள் மற்றும் பாண்டியர்களால் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆந்திரா மற்றும் கலிங்க நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட பாணர் கொங்கு வேளாளர்களின் தலைவர்களாக பாண்டியர்களால் நியமிக்கப்பட்டனர். இந்த பாணர் ஆளுநர்கள் வாணவராயர் என அறியப்பட்டனர்.

    கேரள வெள்ளாளர்
    கிபி 800 முதல் 1102 கிபி வரையிலான பிற்கால சேர ஆட்சியின் போது வேளாளர் வில்லவர்களுக்கு அடிபணிந்த சமூகமாக இருந்தனர். ஆய் மன்னர் அய்யனடிகள் திருவடிகளால் பாரசீக வியாபாரி மார் சாபீர் ஈசோவுக்கு கி.பி 849 இல் வழங்கப்பட்ட தரிசாப்பள்ளி சாசனத்தில், வெள்ளாளர் விவசாயிகளின் நான்கு குடும்பங்கள், ஈழவர்களின் இரண்டு குடும்பங்கள் மற்றும் பிற கைவினை சாதி குடும்பங்கள் அடிமை வேலைக்காரர்களாக வழங்கப்பட்டனர். வயலில் செடிகள் நடுதல் மற்றும் விளைபொருட்களை சந்தைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது என்பவை அடிமைப்படுத்தப்பட்ட வெள்ளாளரின் கடமைகளாக அட்டவணைப்படுத்தப்பட்டன.

    சாளுக்கிய சோழ வம்சம்

    1070 இல் சோழ வம்சம் சாளுக்கிய சோழ வம்சமாக மாற்றப்பட்டது. முதல் அரசனாக குலோத்துங்கன் ஆனார். மேலும் தெலுங்கு பாணர் தலைவர்கள் சோழ நாட்டிற்கு குடிபெயர்ந்தனர்.
    இதைத் தொடர்ந்து சேர மற்றும் பாண்டியன் நாடுகளுக்கு எதிராக சாளுக்கிய சோழர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

    கேரளா மற்றும் பாண்டியன் நாடுகளில் வெள்ளாளர் குடியேற்றம்.

    சாளுக்கிய சோழர்கள் வெள்ளாளர் மற்றும் கள்ளர் என்னும் களப்பிரர் குலங்களை கொண்டு வந்து அவர்களுக்கு பாண்டியன் பிரதேசங்களில் நிலம் கொடுத்தனர்.
    இதேபோல் சாளுக்கிய சோழர்கள் சோழ நாட்டிலிருந்து வெள்ளாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு கேரளாவில் நிலம் கொடுத்தனர். சாளுக்கிய சோழ வம்சத்தின் வருகைக்குப் பிறகு கேரள வெள்ளாளர்களின் மக்கள் தொகை அதிகரித்தது
    தெலுங்கு சாளுக்கிய சோழர்கள் சேர மற்றும் பாண்டிய நாடுகளின் வில்லவர் ஆட்சியாளர்களுக்கு விரோதமாக இருந்தனர்.


    கேரளாவில் வில்லவர்களுக்கு எதிராக வேளாளர் சதி
    சேர வம்சத்தின் பூர்வீக வில்லவர் மன்னர்களுக்கு எதிராக வெள்ளாளர் துளு மன்னர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.

    ReplyDelete
  35. நாகரும் களப்பிரரும்

    அஹிச்சத்திரம் நாகர்- நாயர்

    மயூரா வர்மா (கி.பி. 345)

    மயூரா சர்மா கர்நாடகத்தில் கடம்ப ராஜ்யத்தின் மன்னரான வட பிராமணர் ஆவார். அவர் தனது பெயரை மயூர வர்மா என்று மாற்றினார். மயூர வர்மா ஆரிய பிராமணர்களையும் நாக அடிமை வீரர்களையும், கி.பி 345 இல், அப்போது உத்தர பாஞ்சால நாட்டின் (நவீன நேபாளம்) தலைநகராக இருந்த அஹிச்சத்ரத்தில் இருந்து கர்நாடகாவிற்கு அழைத்து வந்து கரையோர கர்நாடகத்தில் குடியமர்த்தினார். நானூறு நாகர்களின் அடங்கிய ஒவ்வொரு குழுவும் ஒரு அஹிச்சத்ரா பிராமணரால் வழிநடத்தப்பட்டது. கி.பி 1120 இல் பாணப்பெருமாளுடன் சேர்ந்து கேரளாவை ஆக்கிரமித்த நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்ரத்திலிருந்து கர்நாடகாவில் குடியேறியவர்கள் ஆவர்.

    துளுநாட்டில் நேபாள நாகர்

    நேபாள நாகர்கள் உள்ளூர் சமூகங்களான பாணா, பில்லவா மற்றும் மொகவீரா சமூகங்களுடன் கலந்தனர், இறுதியில் அனைத்து துளுநாடு மக்களும் இமாலய வழக்கமான மருமக்கள வாரிசுரிமையை ஏற்றுக்கொள்கிறார்கள். பாணர் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் வில்லவர் சேரர்களின் பரம எதிரிகள் ஆவர். துளுநாட்டில் பாணர் பாண்டா அல்லது நாடாவரா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணர் ஆலுபா ராஜ்யத்தை ஆதரித்த திராவிடர்கள் ஆவர். அகிச்சத்திரம் நாகர்கள் பந்தரு அல்லது பிணைக்கப்பட்ட மக்கள் என்று அழைக்கப்பட்டனர். இடைக்காலத்தில் பாணர்களும் நாகர்களும் கலந்தனர். என்றாலும் பாணர்கள் பிறகும் உயர் பதவியில் தொடர்ந்தனர். உண்மையில் இருவரும் இப்போது பண்ட் என்று அழைக்கப்படுகின்றனர்.
    பாண்டா+பந்தரு=பண்ட்

    நாயரா ஹெக்டே துளுநாட்டில் கானாஜர் போன்ற சிறிய நாடுகளின் ஆட்சியாளர்களாக இருந்தனர்.


    மஹோதயபுரம் சேரர்களின் இடமாற்றம்

    கி.பி .1075 முதல் கேரளாவை ஆலுபாஸ் பாண்டிய நாட்டின் துளுப் படைகள் தாக்கியது.
    கிபி 1102 இல் கொடுங்கலூர் தலைநகராக கொண்ட கேரளத்தின் பிற்கால சேர வம்சம் உடனடியான துளு படையெடுப்பின் சாத்தியத்தால் அச்சுறுத்தப்பட்டது.
    கடைசி கொடுங்கலூர் தமிழ் சேரர் ராமவர்மா குலசேகரப்பெருமாள் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றும்படி கட்டாயத்திலானார். ராமர்மா குலசேகரன் ராமர் திருவடியாக சேராய் வம்சத்தின் அரசரானார். கடைசி வில்லவர் சேர ராமவர்மா தனது ராஜ்யத்தை பிரிக்கவில்லை. கொல்லம் பனங்காவில் கொட்டாரத்தில் இறக்கும் வரை அவர் இந்துவாகவே இருந்தார்.

    கடல் சக்தியாக அரேபியர்களின் எழுச்சி

    பிற்கால சேர வம்சத்தின் கடைசி ஆண்டுகளில் அரேபியர்கள் கடலில் ஆதிக்கம் செலுத்தினர் மற்றும் கணிசமான கடற்படையைக் கொண்டிருந்தனர். மேற்கு கடற்கரையில் அவர்களுக்கு குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கோவாவில் பல தளங்கள் இருந்தன. சீனாவிலிருந்து அரேபியா வரையிலான கடல் வர்த்தகத்தை அரேபியர்கள் கட்டுப்படுத்தினர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு வலுவான தளத்தை நிறுவ விரும்பினர். சீனர்களுக்கு மட்டுமே அரபு கடற்படையை எதிர்கொள்ளும் ஆற்றல் இருந்தது. ராஜேந்திர சோழனின் ஆட்சிக்குப் பிறகு சோழ கடற்படையின் சக்தி குறைந்துவிட்டது. இஸ்லாமிய மதத்தைத் தழுவத் தயாராக இருந்த உள்ளூர் இளவரசர்களை ஆதரிக்க அரேபியர்கள் தயாராக இருந்தனர்.


    துளுநாடு ஆலுபா வம்சம்
    ஆலுபா(ஆளுப அரசு) நாடு மங்களூர் பகுதியில் உள்ள ஒரு சிறிய ராஜ்யமாகும், இது பாணப்பாண்டியன் மன்னர்களால் ஆளப்பட்டது.
    மதுரை பாண்டியன் மன்னர்களைப் போல ஆலுப்பா மன்னர்களும் தங்கள் சொந்த பாண பட்டங்களான பள்ளி, பாண அல்லது வாணி ஆகியவற்றுடன் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர்.
    சேர, பாண்டிய அல்லது சோழ வம்சங்களை எதிர்த்துப் போராடும் திறன் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் அரேபியர்களின் ஆதரவு கேரளத்தின் மீது படையெடுப்பதற்கு துளு மன்னன் கவி ஆலுபேந்திரனின் (கி.பி 1110 முதல் 1160 வரை) சகோதரரான பானு விக்ரம குலசேகரப்பெருமாள் என்ற பாணப்பெருமாள் என்ற துளு இளவரசரை ஊக்குவித்தது.
    துளுநாடு பண்ட் குலத்தால் ஆன பெரிய இராணுவத்தைக் கொண்டிருந்தது.
    அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நேபாள நாக வீரர்களுடன் துளுநாடு பழங்குடி பாணர் வீரர்களின் கலவையாக பண்ட் சமூகம் இருந்தது.
    பண்ட் சமூகத்தின் உயர் மட்டங்களில், சாமந்தர்கள் எனப்படும் பாணப்பிரபுக்கள், ஆளும் பாணப்பாண்டியன் மன்னர்களுடன் சம அந்தஸ்தைக் கோரினர்.

    பண்டைய நேபாளத்தின் அஹிசத்திரம் தலைநகரிலிருந்து நாயர்கள் என அழைக்கப்படும் நாக அடிமை வீரர்கள் பண்ட் சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்தனர். பண்ட் சமூகம் தாய்வழி வம்சாவளியைப் பின்பற்றியது. ஒருவரின் சட்டபூர்வ வாரிசுகள் அவருடைய சகோதரிகள் மகன்கள் ஆவர் .

    ReplyDelete
  36. நாகரும் களப்பிரரும்

    துளு பாணப்பெருமாள் (கிபி 1120 முதல் கிபி 1156 வரை)

    கி.பி .1120 இல் பாணப்பெருமாள் (பானு விக்ரம குலசேகரப்பெருமாள் எனப்படும் பள்ளிபாணப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் தளபதி படைமலை நாயர் தலைமையில் 350000 எண்ணமுள்ள நாயர் படையுடன் படையெடுத்து கேரளா முழுவதும் அடிபணிய வைத்தார். பாணப்பெருமாள் வட கேரளாவில் குடியேறினார். பாணப்பெருமாள் துளுநாடு அரசர் கவி அலுபேந்திராவின் (கிபி 1120 முதல் 1160 கிபி) சகோதரர் ஆவார். அவர் ஒரு புத்தமதத்தவராக இருந்தார். அவர் அரேபியர்களின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் தம் தலைநகரை நிறுவினார்.

    பாணப்பெருமாள் தமிழ் சேர வம்சத்தால் கைவிடப்பட்ட கொடுங்களூரில் இருந்து சுமார் 36 ஆண்டுகள் கேரளாவை ஆட்சி செய்தார்.

    இந்த துளு படையெடுப்பு கர்நாடக கடற்கரையிலிருந்து மலபாருக்கு, வட கேரளாவிற்கு ஒரு நாயர் குடியேற்றத்தை கொண்டு வந்தது.

    படைமலை நாயர்

    பாணப்பெருமாளின் இராணுவத்தின் தளபதி படைமலை நாயர் ராணியுடன் சட்டவிரோதமான உறவைக் கொண்டிருந்தார் என்று கூறப்பட்டது. கோபம் கொண்ட பாணப்பெருமாளின் விசாரித்தபோது ராணி படைமலை நாயரின் மீது பழி சுமத்தினார். ஆனால் தவறு ராணியிடம் இருந்தது.

    'பெண் சொல்லைக்கேட்ட பெருமாளை போலே' என்பது ஒரு பழைய பழமொழி, பாணப்பெருமாள் தனது ராணியால் தவறாக வழிநடத்தப்பட்டார் என்பதைக் குறிக்கிறது. பாணப்பெருமாள் படைமலை நாயருக்கு மரண தண்டனை விதித்தார். ஆனால் செல்வாக்கு மிக்க படைமலை நாயர் தாம் சில காலம் வாழ்ந்த பிறகு தான் கொல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    படைமலை நாயர் மஹல் தீவிற்குச் சென்று தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாற்றிக்கொண்டார் மற்றும் ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவரது மருமகன்கள் மற்றும் வேலைக்காரர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஆனால் பாணப்பெருமாள் படைமலை நாயரை கோரப்புழா ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டார்.
    இறப்பதற்கு முன் படைமலை நாயர் பாணப்பெருமாளை அரேபியர்களிடம் சரணடைய அறிவுறுத்தினார்.
    படைமலை நாயரின் மரணதண்டனை நாயர் வீரர்களின் கலகத்திற்கு வழிவகுத்தது, தனது சொந்த நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்ட பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு அசுவுக்கு (அரேபியா) ஒரு அரபு பாய் கப்பலில் (ஓலமாரி கப்பல்) சென்றார். அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தம்முடைய நாட்டை பிரித்து கொடுத்து விட்டு சென்றார். பாணப்பெருமாள் அதிகாரம் மலபாரில் மட்டுமே இருந்ததாக தெரிகிறது.

    பாணப்பெருமாளின் அரேபிய பயணம்

    பாணப்பெருமாள் தனது மருமகன் கோஹினூருடன் அரேபியாவுக்குச் சென்றார். சாலியம் என்ற இடத்தில் வசித்து வந்த படைமலை நாயரின் உறவினர்கள், முஸ்தா முதுகாடடு, நீலின்ஷாடா, ஷரிபாத் மற்றும் அவர்களின் ஊழியர்களான மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோர் கோழிக்கோட்டில் பாணப்பெருமாளுடன் சேர்ந்தனர்.
    அவரது சகோதரியின் மகன் மகாபலி பாணப்பெருமாள் ஆட்சி செய்த தர்மடத்தில் சிறிது காலம் தங்கிய பிறகு மீண்டும் கப்பலில் ஏறி அரேபியாவுக்குப் பயணம் செய்தார். பாணப்யெருமாள் மகாபலியை இஸ்லாம் மதத்திற்கு மாற அறிவுறுத்தினார். மகாபலி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டு சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    அரேபியர்களின் செல்வாக்கு

    துளு ஆக்கிரமிப்பாளர் பாணப்பெருமாள் வேத ஆழியாரால் இஸ்லாமியராக மாற்றப்பட்டார் என்று கேரளோல்பதி கூறுகிறது. பாணப்பெருமாள் இஸ்லாமிய மதத்திற்கு மாறிய புத்த கலிங்க வம்சத்தைச் சேர்ந்த மஹல் தீவு மன்னர் தோவேமி கலாமிஞ்சாவால் (தோவேமி கலாமிஞ்சா ஸ்ரீ திரிபுவனா-ஆதித்த மகா ராதுன் 1141 முதல் 1166 கி.பி.) அறிவுறுத்தப்பட்டதாக மற்றொரு பதிவு கூறுகிறது. தோவேமி மன்னர் சுல்தான் முஹம்மது இப்னு அப்துல்லா என்று அறியப்பட்டார்.

    இரண்டாம் ஆயிரத்தில் அரேபியர்கள் ஒரு பெரிய கடல் சக்தியாக உருவெடுத்தனர். கி.பி 1156 இல் பாணப்பெருமாள் மற்றும் அவரது இரண்டு மருமகன்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர். ஹுசைன் குவாஜா என்ற கிருஷ்ணன் முன்ஜாட் என்ற படைமலை நாயரும் மஹல்திவீப்பில் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டார்.
    பல நாயர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டனர். அவர்கள் மாப்பிள்ளா முஸ்லிம்களின் கீழ் ஒரு தாய்வழி துணைக்குழுவை உருவாக்கினர்.

    ReplyDelete
  37. நாகரும் களப்பிரரும்

    பாணப்பெருமாளின் அரேபியாவிற்குள்ள பயணம்

    பாணப்பெருமாளும், மருமகன் கோகினூரும் மற்றும் சாலியத்தில் வசித்த படைமலை நாயரின் மருமகன்களான முஸ்தா முதுகாடு, நீலின்ஷாதா, ஷரிபாட் மற்றும் மர்ஜான் மற்றும் அஸ்வத் ஆகியோருடன் பாஸ்ராவுக்குப் பயணம் செய்தனர், அங்கு அவர்களை மாலிக் தினார் வரவேற்றார். பாணப்பெருமாள் அரேபியாவில் 12 ஆண்டுகள் வசித்து வந்தார். கேரளாவுக்கு திரும்பும் பயணத்தில் அவர் ஏமன் நாட்டில் சஹார் முகல்லாவில் வைத்து இறந்தார்.

    கோலத்திரி

    பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கி.பி 1156 இல் கோலத்திரி வடக்கன் பெருமாள் என்ற பட்டத்துடன் கோலத்துநாட்டின் முதல் ஆட்சியாளராக முடிசூட்டினார். கோலத்திரி ஆட்சியாளர்களுக்கு அரேபியர்களின் ஆதரவு இருந்தது. கோலத்திரிகள் அந்த பகுதியில் முக்கிய கடல் சக்தியாக இருந்த அரேபியர்களால் ஆதரிக்கப்பட்டனர். இந்தக் காலத்திற்குப் பிறகு வட கேரளாவில் அரபு குடியேற்றங்களின் அளவு அதிகரித்தன. ஒரு அரசனுக்குப் பிறகு, நம்புதிரி சம்பந்தம் மூலம் பிறந்த அவருடைய சகோதரிகள் மகன் அரசனாக ஆக்கப்பட்டான். இளவரசர்கள் திருமுல்பாடு அல்லது நம்பியாதிரி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர்.

    நம்பூதிரிகளின் சம்பந்தம் உரிமைகள்

    துளு மன்னர்கள் நம்புதிரிகளுக்கு மட்டும் கீழ்படிந்த நாயர் இராணுவத்தை நம்பியதால், நம்பூதிரிகள் ஆட்சி செய்யும் அரசனின் சகோதரிகளுடன் சம்பந்தம் வைத்திருக்கும் வழக்கம் தொடங்கியது. மன்னரின் சகோதரிகளுக்கு பிறந்த மகன்கள் மட்டுமே அடுத்த அரசராக ஆவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலபாரின் பிரிவு
    பாணப்பெருமாள் தனது கட்டுப்பாட்டில் இருந்த மலபார் ராஜ்யத்தை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்கள்) பிரித்து தனது மகன் மற்றும் மருமகன்களுக்கு கொடுத்தார்.


    1. கண்ணூரின் கோலத்திரி
    2. கோழிக்கோட்டின் சாமுத்திரி
    3. அறைக்கல்லின் அலிராஜாக்கள்
    4. வன்னேரியின் பெரும்படப்பு மன்னர்கள்

    இந்த நான்கு நாடுகளையும் அரேபியர்கள் பாதுகாத்து வந்தனர். கி.பி 1120 இல் நாயர்கள் மற்றும் நம்புதிரிகளின் ஆதிக்கத்தை நிறுவுவதற்கு பின்னால் அரேபியர்கள் இருந்தனர். அரேபியர்கள் கேரளாவில் ஒரு கடல் தளம் மற்றும் ஒரு குடியேற்றத்தையும் சீனாவிலிருந்து அரேபியாவிற்கு செல்லும் தங்கள் கப்பல்களுக்கான துறைமுகத்தையும் நிறுவ விரும்பினர்.
    இதன் மூலம் துளு- நேபாள படையெடுப்பாளர்களான துளு மன்னர்கள் மற்றும் நாயர்கள் நம்பூதிரிகள் என்னும் அஹிச்சத்திரம்-நேபாள வம்சாவளியினர் வட கேரளாவில் ஆதிக்கம் செலுத்தினர். நம்பூதிரிகள், அரசர்களின் சகோதரிகள் உட்பட க்ஷத்திரியப் பெண்களுடன் திருமணம் இல்லாது சம்பந்தம் வைத்திருந்ததால், அந்த வம்சங்களை தங்கள் சொந்த நம்பபூதிரி வம்சங்களாக மாற்ற முடிந்தது. நாயர் இராணுவம் நம்புதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால் துளு மன்னர்கள் பலவீனமாக இருந்தனர். நாயர்கள் மற்றும் நம்பூதிரிகளுக்கு அஹிச்சத்திரத்தில் பொதுவான தோற்றமௌ இருந்தது. இவ்வாறு பன்னிரண்டாம் நூற்றாண்டில் வட கேரளா ஒரு நேபாளத்தில் பூர்வீகமுள்ள விநோத ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் மற்றும் ஒரு தாய்வழியுரிமையை கடைப்பிடிக்கும் ஒரு சமூகத்தால் ஆளப்பட்டது. .

    ஆனால் வேணாட்டின் தமிழ் சேர வம்சம் 1156 ல் மீண்டும் கேரளா முழுவதும் தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிறுவியது.

    துளு சாமந்தர்

    கோலத்திரி வம்சம் சாமந்தா என்று அழைக்கப்படும் துளு பண்ட் குலத்தோடு கலந்தது. இந்த சாமந்தர்கள் மற்றும் பிற பண்ட் குலங்கள் (பாண குலங்கள்) சாமந்த க்ஷத்ரியராக கேரளாவை ஆட்சி செய்தனர். சாமந்த க்ஷத்திரியருக்கு நம்பியார் மற்றும் நாயனார் பட்டங்கள் வழங்கப்பட்டன (அம்பலவாசி நம்பியார் போன்ற நாயர்கள் வேறு). நாயர்கள் தங்கள் நாகத் தோற்றம் காரணமாக சூத்திரர்களாகக் கருதப்பட்டனர்.

    சேர-ஆய் இராச்சியம் (கிபி 1102 முதல் கிபி 1335 வரை)
    கி.பி 1102 இல் சேர வம்சத்தின் தாக்குதலால் அச்சுறுத்தப்பட்ட சேர வம்சம் அதன் தலைநகரை கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றியது.
    இந்த காலகட்டத்தில் கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு வில்லவர் குலங்களின் முதல் பெரிய இடம்பெயர்வு ஏற்பட்டது. சேர வம்சம் கொல்லத்தில் உள்ள ஆய் வம்சத்துடன் இணைந்து சேராய் வம்சம் என்ற புதிய வம்சத்தை உருவாக்கியது.
    கி.பி 1156 இல் பாணப்பெருமாள் வெளியேறிய பிறகு, கொல்லத்திலிருந்து ஆட்சி செய்த தெற்கு தமிழ் சேர-ஆய் ராஜ்யம் மீண்டும் சக்திவாய்ந்ததாக மாறியது மற்றும் கேரளா முழுவதும் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியது. சேர-ஆய் மன்னர்கள் தந்தைவழி வம்சாவளியைப் பின்பற்றி தமிழை ஊக்குவித்தனர்.
    சேராய் மன்னர்களின் அரச பட்டப்பெயர் திருப்பாப்பூர் மூத்த திருவடி (திருப்பாப்பு நாடார்கள் இந்த பட்டத்தை இன்றுவரை கொண்டுள்ளனர்)

    ReplyDelete
  38. நாகரும் களப்பிரரும்

    வில்லார்வட்டம் ராஜ்யம் (கி.பி 1102 முதல் கிபி 1450 வரை)

    சேர வம்சத்தின் ஒரு கிளையான உதய ஸ்வரூபம் சேந்தமங்கலத்திலிருந்து ஆட்சி செய்தது. கொல்லத்திற்கு குடிபெயர விரும்பாத வில்லவரும் பணிக்கர்களும் வில்லார்வட்டம் ராஜ்யத்தை உருவாக்கியிருக்கலாம். வில்லார்வட்டம் பிரதேசங்கள் சேந்தமங்கலத்திலிருந்து வைக்கத்திற்கு அருகிலுள்ள உதயனாபுரம் வரை இருந்தன, பரவூர் மற்றும் வைப்பீன் உட்பட வேம்பநாடு காயலுக்கு கிழக்கே உள்ள பெரும்பாலான பகுதிகள் இந்த நாட்டில் அடங்கியிருந்தன.

    பாண்டியன் பேரரசு

    13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கேரளா மதுரை பாண்டிய வம்சத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. வேணாடு சேரர்கள் பாண்டிய வம்சத்தின் கீழ் வந்தனர். துளுநாடும் பாண்டிய வம்சத்தால் ஆளப்பட்டது.

    மகதைமண்டல பாணர்

    கி.பி 1190 முதல் 1260 வரை பாண வம்சத்தினர் மகதைமண்டலத்தை 'பொன்பரப்பினான்' என்ற பட்டத்துடன் அரகலூரில் தலைநகரத்துடனும் ஆட்சி செய்தனர்.
    மகதை மண்டலம் தெற்கு ஆற்காடு மாவட்டத்தை உள்ளடக்கியது.


    மாலிக் காஃபூரின் படையெடுப்பு

    கி.பி 1310 மாலிக் கஃபூரின் படையெடுப்புக்குப் பிறகு மூன்று தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. 1335 வாக்கில், மதுரை சுல்தானகம் உருவாக்கப்பட்டபோது, ​முழு ​கேரளமும் துளு சாமந்த க்ஷத்ரியர்கள் மற்றும் அஹிச்சத்திரத்தில் தோற்றம் கொண்டவர்களான துளுவ பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களின் கீழ் வந்தது. நாயரா, மேனவா, குருபா மற்றும் சாமந்தா போன்ற துளு பண்ட் குலங்கள் கேரளாவின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

    ReplyDelete
  39. நாகரும் களப்பிரரும்

    டெல்லி சுல்தானகத்தின் ஆட்சியின் கீழில் (கி.பி 1311-1377)
    மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலைத் தொடர்ந்து மூவேந்த வில்லவர் ராஜ்யங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. 1314 க்குப் பிறகு, வில்லவர் மக்கள் டெல்லி சுல்தானகம், அரேபியர்கள் மற்றும் பாண ராஜ்ஜியத்தின் பாணர்கள் (வன்னியர் வாணாதிராயர், சமரகோலாகலன்) ஆகியோரின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

    கள்ளர்

    கள்ளர் டெல்லியின் துருக்கிய படையெடுப்பாளர்களுடன் சேர்ந்து அவர்களின் கலாச்சாரம் மற்றும் மதத்தை ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. விருத்தசேதன சடங்கு, சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் கொண்ட தாலி, மணமகனின் சகோதரி தாலியை கட்டுதல் போன்ற கள்ளர்களின் பழக்கவழக்கங்கள் மதுரை சுல்தானிய காலத்திலிருந்து துடங்கியவையாக இருக்கலாம்.

    முஸ்லிம்களுடனான திருமணம் நெல்சன் குறிப்பிட்டுள்ள "கட்டாய மதமாற்றத்தை" விட நம்பத்தகுந்ததாக வெளிப்படுகிறது (1868 , 255).
    மாபார் சுல்தானிய காலத்தில் (1335 முதல் 1377 வரை) அவர்களால் பெறப்பட்ட பல பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் இன்னும் அவர்களால் பின்பற்றப்படுகின்றன.

    1) விருத்தசேதனம்
    2) சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    3) சகோதரி தாலி கட்டுதல்

    விருத்தசேதனம்

    1950 வரை இந்த நடைமுறை அனைத்து பிறமலை கள்ளர்களாலும் கட்டாயமாக கடைபிடிக்கப்பட்டது. இப்போதெல்லாம் விருத்தசேதனம் செய்வது அரிது. ஆனால் விருந்துடன் விருத்தசேதன விழா இன்னும் நடத்தப்படுகிறது. விழாவின் செலவுகளை தாய் மாமன் ஏற்றுக்கொள்கிறார். பிறமலை கள்ளர்களுக்கு முஸ்லிம்களுடனான கடந்தகால உறவுகளைப் பற்றி விவாதிக்கப்படுகிறது. பிறமலை கள்ளர் மற்றும் அம்பலக்காரர் விருத்தசேதனம் செய்வதை நடைமுறையில் வைத்திருக்கிறார்கள். இந்துக்களிடையே இது மிகவும் அரிதான வழக்கம் ஆகும் (டுமான்ட் 1986, 150-3).

    விருத்தசேதனம் என்னும் விசித்திரமான வழக்கத்தை பிறமலை-கள்ளர் பின்பற்றினார்கள். அதாவது ஆண் பிறப்புறுப்பு உறுப்பை மறைக்கும் தோலை வெட்டுதல். இந்த நடைமுறை முதலில் அரபு பழங்குடியினரால் தட்பவெப்ப காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    கி.பி 1311-71 இல் மதுரையை சுல்த்தான்கள் ஆட்சி செய்தபோது, ​​அவர்கள் விருத்தசேதனம் செய்யும் பழக்கத்தை துடங்கினார்கள் .
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    மதுரை பிராந்தியத்தில் பிறமலை கள்ளர் அவர்களின் வரலாற்றின் ஒரு கட்டத்தில் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டார்கள். விழா தொடர்பான செலவுகள் அத்தையால் கொடுக்கப்பட வேண்டும். கிராமத்திற்கு வெளியே ஒரு தேங்காய் தோப்பில் சடங்கு நடத்தப்பட்டது (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    இன்று விருத்தசேதனம் உண்மையில் பிறமலை கள்ளர் சாதி உறுப்பினர்களால் செய்யப்படவில்லை. பையனின் தாய் மாமா செலவுகளைச் ஏற்றுக்கொண்டு பையனுக்கு பரிசுகளை வழங்குவதன் மூலம் அவர்கள் அதை விருந்துடன் கொண்டாடுகிறார்கள். தோலை வெட்டுவது 1950-களில் இருந்து இப்போது செய்யப்படவில்லை
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    பிறமலை கள்ளர்கள் இரண்டு வரலாற்று திருமண சம்பந்தங்களின் விளைவாக இருக்கலாம், ஒன்று கள்ளருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், பின்னர் மற்றொன்று மறவருடன்.
    (வலந்தூர் நாட்டு பிறமலை கள்ளர் மதுரை மாவட்டம் , தமிழ்நாடு: உள்ளூர் அரசியலில் கிராமப் பெண்கள் மற்றும் பாரம்பரியம் அல்லாத வேலை சக்தி (மிச்சிலிம் ஈவா துபோ 1997)

    சந்திரன் மற்றும் நட்சத்திரத்துடன் தாலி
    சிறுகுடி கள்ளர் தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரக் குறியீடுகள் உள்ளன. '' இது நியாயப்படுத்தப்படலாம், ஏனெனில் சிறுகுடி-கள்ளன்களின் தாலியில் பிறை மற்றும் நட்சத்திரம் செதுக்கப்பட்டிருந்தன, அவை முஸ்லிம்களுக்கு புனிதமான சின்னங்கள்.
    (அத்தியாயம் II பிறமலை கள்ளர்களின் வரலாற்று பின்னணி)

    ReplyDelete
  40. நாகரும் களப்பிரரும்

    கள்ளர் திருமணம். தாலி கட்டும் சகோதரி
    பெரும்பாலான கள்ளர்களில் தாலியை மணமகனின் சகோதரியால் கட்டியிருக்கிறார்கள், மணமகனால் அல்ல. ஒரு பெண்ணின் துணியைக் கொண்ட ஒரு கூடை, மற்றும் ஒரு துணி துவைப்பவரிடமிருந்து கடன் வாங்கிய சிவப்பு துணியால் மூடப்பட்ட தாலி சரம் மணமகனின் சகோதரிக்கு அல்லது அவரது பிரிவைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கொடுக்கிறார்கள். மணமகள் வீட்டிற்கு செல்லும் வழியில், இரண்டு பெண்கள் சங்குகளை (இசைக்கருவி) ஊதுகிறார்கள். மணமகனின் மக்கள் மணமகனின் குலம் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர், மேலும் அவர் இந்திர குலம், தளவால நாடு மற்றும் அஹல்ய கோத்ரத்தைச் சேர்ந்தவர் என்று அவர்கள் கூற வேண்டும். மணமகனின் சகோதரி, தாலியை எடுத்து, அங்கிருந்த அனைவரும் தொடும்படி சுற்றிலும் கடந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சரத்தை மணமகள் கழுத்தில் சங்கு ஊதுவதற்கு இடையில் இறுக்கமாகக் கட்டுகிறாள். மணமகள் பின்னர் மணமகனின் வீட்டிற்கு நடத்தப்படுகிறார்
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")


    தஞ்சாவூர் கள்ளர்களில் மணமகன்தான் தாலி கட்டுகிறார்.
    ஆனால் தஞ்சையில் அவர்கள் அங்குள்ள ஏராளமான பிராமணர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டு, தலையை மொட்டையடித்து பிராமணர்களை அர்ச்சகர்களாக நியமித்தனர். அவர்களது திருமணங்களிலும் மணமகன் தாலியை தானே கட்டிக்கொள்கிறார், மற்ற இடங்களில் அவருடைய சகோதரி அதைச் செய்கிறார்.
    (எட்கர் தர்ஸ்டனின் "தென்னிந்தியாவின் சாதி மற்றும் பழங்குடியினர்")

    துருக்கியர் ஆட்சியின் போது தஞ்சாவூரைச் சுற்றி நில உடைமை வகுப்பாக கள்ளர்கள் மாற்றப்பட்டனர். டெல்லி சுல்தானியரின் கீழ் இருந்தபோது கள்ளர் பெயர்கள் மற்றும் பதவிகள் பற்றி எந்த ஆவணங்களும் இல்லை.


    பலகணவருடைமை

    பண்டைய பாஞ்சால நாட்டில் (உத்தரபிரதேசம் மற்றும் நேபாளம்) ஒரு பெண் பல கணவர்களை சிலசமயங்களில் சகோதரர்களை திருமணம் செய்யும் பழக்கவழக்கம் நடைமுறையில் இருந்தது.

    இது நாயர்கள் போன்ற நாகர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த பாண்டவ சமஸ்காரம் அல்லது திரவுபதி வழக்கம் என்று அழைக்கப்பட்டது. மேற்கு மதுரையின் கள்ளர்களில் ஒரு பெண் ஒரே நேரத்தில் பத்து தாய்வழி மைத்துனர்களை வரை திருமணம் செய்து கொண்டார்.

    எட்கர் தர்ஸ்டன் மதுரையின் மேற்கு பகுதியில் நிலவிய ஒரு விசித்திரமான வழக்கத்தை பதிவு செய்துள்ளார்.

    அத்தையின் மகளை திருமணம் செய்ய அதிக உரிமை கோருபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே, ஒரு பெண்ணுக்கு இரண்டு முதல் பத்து கணவர்கள் வரை இருக்கலாம்

    ReplyDelete
  41. நாகரும் களப்பிரரும்


    விஜயநகர படையெடுப்பு.

    1377 இல் விஜயநகர இளவரசர் குமார கம்பணன் மதுரை சுல்தானால் ஆளப்பட்ட பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். குமார கம்பணன் மதுரையின் துருக்கிய ஆட்சியாளர்களை தோற்கடித்து பாண்டிய நாட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால் அவர் மதுரையின் சிம்மாசனத்தில் முறையான பாண்டிய மன்னர்களை மீண்டும் அமர்த்தவில்லை.

    பலிஜா நாயக்கர்களின் விஜயநகர வம்சம் கிஷ்கிந்தாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தது (அனேகுண்டி). விஜயநகர தலைநகர் ஹம்பி கிஷ்கிந்தாவிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. பலிஜா அரசர்கள் வில்லவர்களைப் போலவே மகாபலி மன்னரிடமிருந்து வந்ததாகக் கூறினர். பலிஜாக்கள் பாண பரம்பரையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆவர். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வில்லவர்களின் போட்டியாளர்களாகவும் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.
    பாண ராஜ்ஜியத்தின் தளபதிகள் வாணாதிராயர் (வாணகோவரையர், வாணாதிராஜா, வன்னியர், வாணர், வாணவராயர்) என்று அழைக்கப்பட்டனர்.
    பலிஜா நாயக்கர், வாணாதிராயர் மற்றும் லிங்காயத்துகளை தமிழ் நாட்டை ஆள பயன்படுத்தினர். பிற்கால பாளையக்காரரும் அதே குலத்தைச் சேர்ந்தவர்கள்.
    வாணாதிராயர்கள் பாண்டியர்களுக்கு எதிராக விஜயநகர வம்சத்தை ஆதரிக்க உள்ளூர் நாகர்களை (வெள்ளாளர், கள்ளர் மற்றும் மறவர்) தங்கள் கீழ் தொகுத்தனர். நாகர்கள் வில்லவர் மக்களுக்கும் அவர்களின் சேர, சோழ மற்றும் பாண்டியன் வம்சத்துக்கும் விரோதமாக இருந்தனர். ஒவ்வொரு வாணாதிராயரும் உள்ளூர் நாக குலத்தைச் சேர்ந்தவர்கள் போல் நடித்தனர் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் வாணாதிராயர் குலத்தில் மட்டுமே திருமணம் செய்து கொண்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு பல சிறிய வாணாதிராயர்கள் அந்தந்த நாகர், கங்கை அல்லது பாணர் குலங்களுடன் இணைந்தனர்.

    சேதிராயர்
    கள்ளர் மற்றும் அகமுடையார் ஆகியோர் மத்தியப் பிரதேசத்தில் கென் ஆற்றின் கரையில் உள்ள சேதி நாட்டிலிருந்து குடியேறியவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு சேர்வை மற்றும் சேதிராயர் பட்டங்கள் உள்ளன. அகம்படியார் முன்பு ஆந்திராவில் பூங்கனூர் ஜமீனுக்கு சேவை செய்து வந்தனர். கள்ளர் மறவர் அகம்படியார் அனைவரும் பிரிட்டிஷ் காலத்தில் குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டனர். இப்போதெல்லாம் தமிழ்நாட்டில் ஏராளமான காவல் நிலையங்கள் இருப்பதால், கள்ளர்-மறவர் குற்றங்கள் சற்று குறைந்துள்ளன.

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் வீடுகள்

    நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி 12 அடி சுவர் கட்டி ஒவ்வொரு வீட்டையும் பலப்படுத்தினர். அவர்களின் வீட்டின் முன்பக்க கதவு சுமார் 8 அடி உயரமுள்ள தடிமனான பலகையால் ஆனது, அதைத் பத்து பேர் கூடி தள்ளி திறக்க முடியும். நாட்டுகோட்டை செட்டியார் வீடுகள் 10 முதல் 15 செட்டியார் குடும்பங்கள் தங்கும் பெரிய இடவசதியைக் கொண்டுள்ளன. சிலர் ஒவ்வொரு இரவும் உறங்காது தங்கள் வீட்டை சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இரவில் வீட்டைத் திறக்கக் கூடாது என்பதற்காக வீட்டுக்குள் கிணறு கூட தோண்டப்பட்டது. கள்ளர்கள் மற்றும் மறவர்களின் தொடர்ச்சியான திருட்டு அச்சுறுத்தல்கள் இருந்ததால்தான் செல்வந்தர்களாய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தம்முடைய வீடுகளை சுற்றி கோட்டை கட்டி பலப்படுத்த வழிவகுத்தது.

    ReplyDelete
  42. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  43. வில்லார்வெட்டம் இராச்சியம்.

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  44. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete

  45. சிரியன் கிறிஸ்தவர்கள் ஒரு தொலைந்து போன வில்லவர் குலம்

    சிரிய கிறிஸ்தவர்கள் பெர்சியாவின் தலைநகர் செலூசியா ஸ்டெசிஃபோனில் இருந்து குடியேறியவர்கள். அவர்கள் சிரிய, பாரசீக, குர்திஷ், அராமிக் மற்றும் அரபு வேர்களைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் சிறிது தமிழ் வில்லவர் வேர்கள் மற்றும் போர்த்துகீசிய இரத்தமும் இருக்கலாம்.

    வில்லார்வட்டம் இராச்சியம்

    கி.பி 1102 இல் வில்லவர்களால் ஆளப்பட்ட தமிழ் பிற்கால சேர சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது. சேர தலைநகர் கொடுங்களூரிலிருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. வைக்கம் அருகே உதயணபுரம் முதல் சேந்தமங்கலம், வைப்பீன், பரவூர் மற்றும் வேம்பநாட்டுக் காயலுக்குக் கிழக்கே உள்ள எர்ணாகுளம் கடலோரப் பகுதியை சேர வம்சத்தின் ஒரு கிளை தொடர்ந்து ஆட்சி செய்தது. சேந்தமங்கலம் வில்லார்வெட்டம் பேரரசின் தலைநகராக இருந்தது.


    வில்லார்வட்டம் ராஜ்ஜியம் உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது. வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1339 இல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். பல தமிழ் பணிக்கர்களும் மற்ற வில்லவர் மக்களும் போர்த்துகீசியர்களுடன் இணைந்துள்ளனர், இது சிரிய கிறிஸ்தவர்களுக்கு திராவிட வில்லவர் வம்சாவளியைச் சேர்ந்த வீட்டுப் பெயர்களை வழங்கியது.. பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசிய கலவை அவர்களை மெஸ்டிசோ சமூகமாக மாற்றியது. ஆனால் அவர்களின் வீட்டுப் பெயர்கள் இன்னும் இடைக்கால வில்லவர் பட்டங்களாகவே உள்ளன.


    சிரிய கிறிஸ்தவ குடும்பப்பெயர்கள்


    வில்லாடத்து (வில்லவர் இடம்)

    பயிநாடத்து (பயி(ல்)நாடத்து) பயிற்றுவிக்கும் நாடார்கள்

    மாவேலி ( மகாபலி வில்லவர் பட்டம்)

    படயாட்டில் (படைவீடு)

    பரியாடன் (குதிரை ஓட்டுபவர், குதிரைப்படை)

    பனயத்தற (பனையன்-பாண்டியன் நிலம்)

    கூவேலி(கூபக நிலம்)

    பைநாடத்து (பயி(ல்)நாடத்து) (பயிற்சி நாடார்)

    படமாடன் (படமாடன்) ராணுவ இல்ல பொறுப்பாளர்

    கோலாட்டு( அரசரால் கட்டுப்படுத்தப்பட்ட குடும்பம்)

    புல்லன்( பாண்டிய அடியாட்கள்)

    கோவாட்டு (அரசனால் கட்டுப்படுத்தப்பட்ட குடும்பம்)

    பணிக்கர்(வில்லவர் துணைக்குழு)

    பாணேலிக்குடி(எழிமலையில் இருந்துள்ள பாணர்)

    பணிக்கவீட்டில்(பணிக்கர், ராணுவ பயிற்சியாளர் வீடு. வில்லவர் துணைக்குழு)

    விச்சாற்றேல்(வில்வித்தை வீடு)

    மூவாட்டு(மூன்று வகை படைகளை கட்டுப்படுத்துபவர்)

    மேநாசேரி(மேனாடு- சேர நாட்டுக் குடியேற்றம்)

    கோராட்டுகுடி(அரச கட்டுப்பாட்டில் உள்ள வீடு)

    கோலாட்டுகுடி(அரசனால் கட்டுப்படுத்தப்படும் வீடு)

    சேரதாயி(சேர மற்றும் ஆய் குலத்தவர்)

    மாவட்டத்தில்(பெரிய பகுதி வீடு)

    மைப்பான் (முக்கிய தலைவர்)

    மணவாளன்( மணமகன், பாணகுலம்)

    கட்டியக்காரன் (அறிவிப்பாளர்)

    வள்ளூரான்(வில்லவர் துணைக்குழு)

    கண்ணேல்(பிரதான வீடு)

    மானாடன்(மாநாடன்) மாநாடு=பாண்டிய நாடு

    மழுவாஞ்சேரி(மழுவர் ஒரு வில்லவர் துணைக்குழு)

    பாணப்பறம்பில்(பாணர் நிலத்தில் வீடு

    பாணிக்குளம்(பாணர் குளம்)

    படயாடன் (தளபதி)

    இஞ்சோடி( இஞ்சி கடத்துபவர்)

    எடப்புலவன்(மேய்ப்பன் புலவன்)

    வேழப்பறம்பில்(யானை நில வீடு)

    செட்டியாடன்(வர்த்தகரின் கட்டுப்பாட்டாளர்)

    தண்டாப்பிள்ளி(வரி வசூலிக்கும் வீடு)

    அம்பாட்டு(வில்வித்தை வீடு)

    வெள்ளாட்டுகுடி(வெள்ளாளர்களின் கட்டுப்பாட்டாளர்)

    கரிமத்தி(யானை மையம்)

    மாணிக்கத்தான் (விலையுயர்ந்த கற்கள் விற்பனையாளர்)

    வெளியத்து(சேரர்களின் வெளியர் குலத்தைச் சேர்ந்தவர்)

    கலியாடன்(கள்ளர் இராணுவத்தின் கட்டுப்பாட்டாளர்)

    கோயிக்கர(அரண்மனை பக்கம்)

    கள்ளோப்பிள்ளி(கள்ளச்சான்றாரின் வீடு)

    ஆவுபாடன்(மாட்டு வயல் உரிமையாளர்

    பறவாட்டி(பறை அடிப்பவர்களை கட்டுப்படுத்துபவர்)

    பந்தலானி (பந்தலானி கொல்லத்திலிருந்து)

    ஈழராத்து( இலங்கையரின் வீடு)

    மாந்நாட்டு(பாண்டிய ராஜ்ஜியத்திலிருந்து)

    பெருவஞ்சிக்குடி(சேர கொடுங்களூர் வீடு)

    அம்பாடன்(வில்லாளி)

    கள்ளியத்து(கள்ள சான்றார் வீடு)

    இடைக்காலத் தமிழில் நூற்றுக்கணக்கான சிரியன் வீட்டுப் பெயர்கள் உள்ளன.
    பெரும்பாலான சிரிய கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த குடும்பப் பெயர்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது. இடைக்கால கேரளாவின் வில்லவர் பட்டங்களின் அர்த்தமும் அவர்களுக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  46. கொலம்பஸின் மருமகனுக்கும் கடைசி சேர இளவரசிக்கும் இடையிலான காதல்


    பெரெஸ்ட்ரெல்லோவின் வம்சாவளி

    ஃபெலிப் பெரெஸ்ட்ரெலோ பிரபலமான மாலுமிகளின் குடும்பத்திலிருந்து வந்தவர். இன்று வடக்கு இத்தாலியில் உள்ள லோம்பார்டியில் உள்ள பியாசென்சா என்ற இடத்தில் இருந்து வந்த பிலிப்போ பல்லேஸ்ட்ரெல்லி என்பவரின் வம்சாவளியை அறியலாம். போர்த்துகீசிய மன்னரை மணந்த இளவரசி லியோனோர் டி அரகோனின் பரிவாரத்தில் 1437 இல் பல்லேஸ்ட்ரெல்லி லிஸ்பனுக்கு குடிபெயர்ந்தார்கள். அவரது சந்ததியினர் அறியப்பட்ட அனைத்து கடல்களிலும் பயணம் செய்தனர், போர்த்துகீசிய நீதிமன்றத்தில் உயர் பதவிகளை வகித்தனர், மேலும் தங்கள் சொந்த சின்னங்கள் மற்றும் பிரபுக்களின் பிற அடையாளங்களை கொண்டிருந்தனர்.

    பிலிப்போவின் மகன்களில் ஒருவரான பர்த்தோலோமியூ பெரெஸ்ட்ரெலோ, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அட்லாண்டிக் தீவான மாடீராவின் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பார்டோலோமியுவின் நான்காவது மனைவி இசபெல் மோனிஸின் மகள் பிலிபா மோனிஸ் பெரெஸ்ட்ரெலோ, கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமியை மணந்தார்.

    பெரெஸ்ட்ரெலோக்கள் சிலர் கிழக்கே வந்து, கேப் ஆஃப் குட் ஹோப் முதல் கான்டன் வரையிலான பகுதியில் வர்த்தகம் மற்றும் கடல்வழியில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்களில் ஒருவரான மானுவல் டி மெஸ்கிடா பெரெஸ்ட்ரெலோ 1505 இல் கோவாவுக்கு வந்து 38 ஆண்டுகள் கிழக்குக் கடல்களைப் படித்து போர்த்துகீசியப் பேரரசை உருவாக்கினார். சிறந்த திறமையும் அனுபவமும் கொண்ட மாலுமியான அவர், மொரிஷியஸ், ரீயூனியன், ரோட்ரிக்ஸ், மயோட் மற்றும் கொமோரெஸ் போன்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளைக் கண்டுபிடித்தார்.

    மற்றொரு குடும்ப உறுப்பினர், ராஃபேல் பெரெஸ்ட்ரெலோ, கிழக்கு கடல் பகுதியில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். 1511 இல் மலாக்காவைக் கைப்பற்றுவதில் அல்போன்சோ டி அல்புகெர்கிக்கு ராஃபேல் உதவினார். அவரது சகோதரர் பார்டோலோமியு மலாக்காவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அங்கு ராஃபேல் அவருடன் சென்றார்.

    பெரெஸ்ட்ரெலோ குலமானது போர்த்துகீசிய கடல் சக்தியை அதன் உச்சத்தில் உருவகப்படுத்தியது: மாடீராவின் முற்பிதா பார்த்தோலோமியு அட்லாண்டிக் கடலை ஆய்வு செய்தார், அவரது மருமகன் கிறிஸ்டோபர் கொலம்பஸ் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து புதிய உலகத்தை அடைந்தார், மேலும் அவரது உறவினர் ராஃபேல் கான்டன் (குவாங்சோ) என்ற சீன துறைமுகத்திற்குள் நுழைந்த முதல் ஐரோப்பியரானார். பெரெஸ்ட்ரெலோ வம்சம் கிழக்கின் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது - கோவா, கொச்சி, ஹோர்முஸ் மற்றும் மலாக்கா - உயர் பதவிகளை தக்க வைத்திருந்தது மற்றும் தனியார் வர்த்தகத்தின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தியது.

    ReplyDelete
  47. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பந்தளத்தின் பாண்டிய இளவரசன் அய்யப்பன் தலைமையில் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாயக்கர் படையைத் தோற்கடித்தனர். மதுரை திருமலை நாயக்கர் கி.பி.1623ல் மறவர் தலைவனும் கொள்ளைக்காரனுமான உதயணன் தலைமையில் ஒரு கொள்ளைப் படையை அனுப்பினார். உதயணனும் அவனது படையும் 17 வருடப் போராட்டத்திற்குப் பிறகு தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

    அர்த்துங்கல் தேவாலயம்

    செயின்ட் ஆண்ட்ரூ பேராலயம், அர்த்துங்கல் அரபிக்கடலை நோக்கிய கடற்கரையோரத்தில் கேரளாவின் சேர்த்தலையில் உள்ள அர்த்துங்கலில் அமைந்துள்ளது. அர்த்துங்கல் தேவாலயம் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துகீசியர் காலத்தில் கட்டப்பட்டது. இது 1584 இல் விகார் ஜாகோமோ ஃபெனிசியோ என்ற இத்தாலிய ஜேசுயிட் பாதிரியாரால் மீண்டும் கட்டப்பட்டது. பக்தர்கள் இவரை "அர்த்துங்கல் வெளுத்தச்சன்" என்று அழைத்தனர். திருத்தந்தை. ஜியாகோமோ ஃபெனிசியோ (கி.பி. 1558 - கி.பி. 1632), லத்தீன் மொழியில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதுவதற்காக இந்து மதத்தைப் படித்த முதல் ஐரோப்பிய மிஷனரி ஆவார். இந்து கலாச்சாரத்திலும், சீரப்பஞ்சிற பணிக்கர்களிடம் கற்றுக்கொண்ட களரிப்பயற்றிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

    அர்த்துங்கல் வெளுத்தச்சன்

    அர்த்துங்கல் வெளுத்தச்சன் அர்த்துங்கல் தேவாலயத்தின் விகாரியாக இருந்தபோது, ​​சேர்த்தலையின் லத்தீன் கத்தோலிக்கர்களும் உதயணனுக்கு எதிரான போரில் இணைந்தனர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் முகம்மாவிலேயே புகழ்பெற்ற சீரப்பஞ்சிற களரியில் பயிற்சி பெற்றவர் என்றும் புகழ் பெற்றவர். அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் அவரது லத்தீன் கத்தோலிக்கர்கள் ஐயப்பனின் ஆதரவாளர்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அதாவது கி.பி.1623 முதல் 1659 வரையிலான காலகட்டத்தில், அர்த்துங்கல் வெளுத்தச்சன் மிகவும் வயதானவராக இருந்திருக்கலாம். அர்த்துங்கல் வெளுத்தச்சன் கிபி 1632 இல் காலமானார்.

    கி.பி.1632ல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் ஐயப்பன் சுவாமி ஒரு இளைஞராக இருந்தார். எனவே உதயணனுடன் ஐயப்பன் செய்த போர் கி.பி.1632 முதல் 1640 வரையிலான காலகட்டத்தில் நடந்திருக்கலாம். நாயக்கர் படையெடுப்பிற்கு பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உதயணன் கொல்லப்பட்டதாக வாய்மொழி மரபுகள் கூறுகின்றன.

    புனித செபாஸ்டியன் சிலை

    கி.பி 1747 இல் புனித செபஸ்தியார் சிலை நிறுவப்பட்ட போது, ​​பல உள்ளூர் பக்தர்கள் சிலையை வெளுத்தச்சன் என்றும் அழைக்கத் தொடங்கினர்.

    ஆலங்காடு யோகம்

    ஐயப்ப ஸ்வாமி ஆலங்காடு தலைவர் ஞாலூர் கர்த்தா, காம்பிள்ளி பணிக்கர் மற்றும் முல்லப்பிள்ளி நாயர் ஆகியோர் முன்னிலையில் அர்த்துங்கல் வெளுத்தாவுடன் ஆலுவாவில் உள்ள பெரியாறு கரையில் ஆலங்காட்டு வீரர்களுக்கு உரையாற்றியதாக புராணங்கள் கூறுகின்றன. எருமேலியில் மலைப்பாங்கான நிலப்பரப்பில் ஏறிச் செல்லும் போது 'சரணம் ஐயப்பா' என்று முதன்முதலில் முழக்கமிட்டவர் காம்பிள்ளி பணிக்கர் ஆவார். முதல் வெளிச்சப்பாடு அல்லது தேவ வாக்கு கூறுபவர் இவரே ஆவார். ஆலுவாவில் உள்ள பாரூர்கவலயிலிருந்து இடதுபுறம் போகும்போது ஆலங்காட்டுக்கு அருகில் உள்ள இடம் காம்பிள்ளி.

    அம்பலப்புழா யோகம்

    அம்பலப்புழா பழமையான பாண்டிய துறைமுக நகரமான புறக்காடு அருகே உள்ளது. பழங்காலத்தில் வேம்பநாட்டுக் காயலுக்கு தெற்கே உள்ள அனைத்து பகுதிகளும் பாண்டிய வம்சத்தின் கீழ் இருந்தன. கி.பி 77 இல் முசிறிக்குச் சென்ற பிளினி, மோதுராவின் மன்னன் பாண்டியோன் ஆட்சி செய்த நகரமான பரேகே-புறக்காட்டில் மிளகு வாங்க உள்ளூர் மக்களால் வற்புறுத்தப்பட்டார்.

    எருமேலியில் வாவர் தலைமை தாங்கிய ஐயப்பன் படையில் சேர்வதற்காக இங்கிருந்து ஒரு பணிக்கர் படை புறப்பட்டது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் எருமேலியில் அம்பலப்புழா யோகம் பக்தர்களால் பேட்ட துள்ளல் என்ற புனித சடங்கு நடனம் ஆடப்படுகிறது.

    ReplyDelete
  48. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    பாண்டியன் வனவாசம்

    திருமலை நாயக்கர் (கி.பி. 1723 முதல் 1759 வரை) ஆட்சிக்கு வந்தபோது, ​​மதுரையிலிருந்து அனைத்து பாண்டிய குடும்பங்களையும் நாடு கடத்தினார் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சிலர் வேணாட்டில் உள்ள கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் குடியேறினர். ஆனால் பூஞ்சாறு மற்றும் பந்தளம் ஆகிய இடங்களில் குடியேறிய பாண்டியக் குடும்பங்கள் கி.பி 1610 ஆம் ஆண்டிலேயே குடியேறியிருக்கலாம்.

    பாண்டிய இளவரசி மாயாதேவிக்கு பிறந்த அய்யப்பன், 1632 இல் இறந்த அர்த்துங்கல் வெளுத்தச்சன் வாழ்ந்த காலத்தில் இளைஞராக இருந்ததால், பாண்டிய குடியேற்றம் கி.பி 1610 இல் நிகழ்ந்திருக்கலாம்.

    பணிக்கர்கள்

    பணிக்கர்கள் தற்காப்புக் கலைப் பயிற்சியாளர்கள், அவர்கள் போர் வீரர்களுக்குப் பயிற்சி அளித்தனர். ஒவ்வொரு பணிக்கரும் ஒரு சிறிய படையை பராமரித்து, அவர்கள் சேர மற்றும் தொடர்புடைய பாண்டிய வம்சங்களை ஆதரித்தனர். பணிக்கர் என்பவர்கள் தமிழ் வில்லவர் மக்களின் துணைக்குழுக்கள் ஆவர்.

    ஆனால் கி.பி 1310 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு, மற்றும் பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு கி.பி 1335 இல் கேரளாவில் துளு தாய்வழி அரசுகள் நிறுவப்பட்டன. அதன் பிறகு சாமந்த க்ஷத்திரியர்கள், துளு பிராமண நம்பூதிரிகள் மற்றும் நாயர்களால் கேரளா ஆட்சி செய்யப்பட்டது. இக்காலத்தில் பல பணிக்கர்களும் கேரளாவை விட்டு வெளியேறினர். சிலர் இலங்கை சென்றனர். சிலர் ஈழவர்களுடனும், மற்றவர்கள் போர்த்துகீசிய இராணுவத்துடனும் பின்னர் சிரியன் கிறிஸ்தவர்களுடனும் இணைந்தனர்.

    சீரப்பஞ்சிற பணிக்கர்கள்

    சேர்த்தலையில் உள்ள முகம்மாவில், சீரப்பஞ்சிற களரி அமைந்திருந்தது. சீரப்பஞ்சிற பணிக்கர்கள் ஈழவர்களுடன் இணைந்திருந்தார்கள். இந்த சீரப்பஞ்சிற களரியில் ஜேசுயிட் பாதிரியார் அருட்தந்தை ஜாகோமோ ஃபெனிசியோ, என்ற அர்த்துங்கல் வெளுத்தச்சன் களரிப்பயற்றில் பயிற்சி பெற்றார். சீரப்பஞ்சிற களரியில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அர்த்துங்கல் தேவாலயம் இருந்தது. அய்யப்பன் சீரப்பஞ்சிற களரியில் தற்காப்பு கலை பயிற்சி பெற்றவர்.
    அடுத்த சீரப்பஞ்சிற பணிக்கரின் மகள் லளிதா பிற்காலத்தில் மாளிகப்புறத்தம்மா என்று அழைக்கப்பட்டார்.

    பாண்டிய பிரதேசங்கள்

    17 ஆம் நூற்றாண்டில், மத்திய கேரளா தாய்வழி துளு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டாலும், ஆலங்காடு, அம்பலப்புழா மற்றும் பெரியாற்றின் கரையோரம் இருந்த பல பணிக்கர்களும் பந்தளத்தின் பாண்டியர்களுக்கு விசுவாசமாக இருந்தனர். மத்திய கேரளாவில் பாண்டியர்களின் பிரதேசங்கள் பந்தளம், மாவேலிக்கரை மற்றும் காஞ்சிரப்பள்ளி பகுதி ஆகும். மேலும் இந்த பாண்டிய பிரதேசம் பாண்டியன் பதிவுகளில் கேரளசிங்க வளநாடு என்று அழைக்கப்பட்டது.

    கேரளாவில் பாண்டியரின் குறுநாடுகள்
    1. மாறநாடு கொல்லம்
    2. பந்தளம்
    3. அம்பலபுழா-புறக்காடு
    4. நிரணம்-கோட்டயம்
    5. ஆலங்காடு

    நாயக்கர் தாக்குதல்

    திருமலை நாயக்கர் 1623 முதல் 1630 கி.பி.க்கு இடைப்பட்ட காலத்தில் கேரள பாண்டியர்களுக்கு எதிராக மறவப்படையுடன் கொள்ளையனாக இருந்த உதயணன் என்ற மறவ தலைவனை கேரளாவிற்கு அனுப்பினார். மூணாறு அருகே கரிமலையில் உதயணன் கோட்டை கட்டினான். உதயணன் அருகில் இருந்த இடங்களில் கொள்ளையடிக்க ஆரம்பித்தான். உதயணன் பாண்டிய இளவரசி மாயாதேவியைக் கடத்தினான் ஆனால் அவள் மீட்கப்பட்டாள். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகுதான் உதயணன் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

    நாயக்கர் படையெடுப்பு பற்றிய அச்சம் உதயணனுக்கு எதிராக பலதரப்பட்ட மக்கள் ஒன்றிணைவதற்கு வழிவகுத்தது.

    பாண்டியன் இளவரசியின் மீட்பு

    பாண்டிய மன்னர் சீரப்பஞ்சிற பணிக்கர் உதவியுடன் தன் சகோதரியை மீட்டு சீரப்பஞ்சிற தறவாடு வீட்டில் தங்க அனுப்பினார். பாண்டிய இளவரசி சீரப்பஞ்சிற பணிக்கரின் மருமகனை மணந்திருந்தார் என்பது ஒரு பார்வை. அவர்களுக்குப் பிறந்த மகன்தான் ஐயப்பன்.
    பணிக்கர் களரியாக இருந்த ஆலங்காடு யோகம், ஐயப்பனின் தந்தையின் இடமான பித்ருஸ்தானமாகவும் கருதப்படுகிறது. சீரப்பஞ்சிற பணிக்கரின் சகோதரியின் கணவர் ஆலங்காடு பணிக்கர் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம்.

    பொதுவாக பணிக்கர் வில்லவர் வம்சங்களுக்கு சேவை செய்த தற்காப்பு பிரபுக்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த அந்தஸ்தால் இளவரசிகளை அவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சமே கேரளாவில் தப்பியோடியவர்கள் மற்றும் அவர்கள் பாதுகாப்பிற்காக பணிக்கர் படைகளை நம்பியிருந்தனர்.

    ReplyDelete
  49. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    ஒத்திசைவான நம்பிக்கை

    ஆனால் அய்யப்பன் மிகவும் இளமையாக இருந்த அந்த சகாப்தத்தில், ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்று மக்கள் நம்பத் தொடங்கினர்.

    செபஸ்தியார் ஒரு ரோமானிய அதிகாரி, அவர் கிறித்துவ மதத்தைத் தழுவினார், அவர் பிரிட்டோரியன் காவலர்களின்  கேப்டனாக இருந்தார், அவர் ரோமானிய பேரரசர் டியோக்லெஷியனை (கி.பி. 284 முதல் 305 வரை) கேலி செய்து அவமானப்படுத்தினார். இது புனித செபஸ்தியார் மீது அம்புகளை எய்து மரணதண்டனை நிறைவேற்ற வழிவகுத்தது. புனித செபஸ்தியார் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் பிரபலமான புனிதர் ஆனார்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் மிலனில் செதுக்கப்பட்ட புனித செபஸ்தியாரின் சிலை கி.பி 1647 இல் நிறுவப்பட்டது.

    போர்த்துகீசிய சகாப்தத்தில் ஜேசுயிட் பாதிரியார்கள் உள்ளூர் இந்து மற்றும் திராவிட பழக்க வழக்கங்களை நிராகரிக்கவில்லை. கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெண்கலக் கொடிக் கம்பங்கள் இருந்தன, அதில் கொடிகள் ஏற்றப்பட்டன. புனித செபாஸ்டியன் தேவாலயங்களில் இன்றும் வருடாந்திர திருவிழாவின் போது தேவாலயத்தின் மீது இரண்டு வெள்ளை பருந்துகள் பறக்கும் தோற்றத்திற்காக பலர் காத்திருக்கிறார்கள். இது கேரள கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் ஒரு இந்து வழக்கம் ஆகும்.

    ஐயப்பன் பக்தர்கள்

    பல ஐயப்பன் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் புனித யாத்திரையின் ஒரு பகுதியாக அர்த்துங்கல் பசிலிக்காவிற்கு வருகை தருகின்றனர். அய்யப்பன் புனித செபஸ்தியாருடன் மிகவும் நட்பாக பழகியதே இதற்குக் காரணம். அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அவர்கள் சகோதரர்களாக கருதப்பட்டனர்.1647 ஆம் ஆண்டு அர்த்துங்கல் தேவாலயத்தில் பளிங்கு கல் செபஸ்தியார் சிலை நிறுவப்பட்டது. எனவே புனித செபஸ்தியாரோடுள்ள சுவாமி ஐயப்பனின் நட்பு அந்த காலத்திலேயே தொடங்கியிருக்கலாம்.

    சுவாமி அய்யப்பன் கி.பி 1647 இல் அர்த்துங்கல் தேவாலயத்தில் உள்ள புனித செபஸ்தியார் சிலையை பார்வையிட்டிருக்கலாம். இந்த நிகழ்வு சுவாமி ஐயப்பனும் புனித செபஸ்தியாரும் சகோதரர்கள் என்ற புராணத்தை உருவாக்கியிருக்கலாம். அர்த்துங்கல் லத்தீன் கத்தோலிக்கர்கள் அய்யப்பனின் வலுவான ஆதரவாளர்களாக இருந்தனர்.

    அர்த்துங்கல் தேவாலயத்தில் சபரிமலை பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர். அவர்கள் யாத்ரீகர்களின் கழுத்தில் அணிந்திருக்கும் முத்ரா என்ற புனித சங்கிலி மாலையை அகற்றுகிறார்கள். தேவாலயத்திற்கு அருகில் உள்ள இரண்டு குளங்களில் ஒன்றில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.

    மத நல்லிணக்கம்

    அய்யப்பனால் நிறுவப்பட்ட மத மற்றும் இன நல்லிணக்கத்தால் அர்த்துங்கல் தேவாலயத்திலும் வாவர் பள்ளியிலும் பக்தர்கள் வழிபட முடிந்தது. மலை அரையர், பணிக்கர், லத்தீன் கத்தோலிக்கர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஐயப்பனை ஆதரித்து மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.

    அசல் பந்தளம் தமிழ் வில்லவர் பாண்டிய வம்சம் 1700 களின் பிற்பகுதியில் முடிவுக்கு வந்திருக்கலாம். அதன் பிறகு பந்தளம் பாண்டியன் பிரதேசம் ராஜா என்ற பட்டத்துடன் பாண்டியர்களாக வேடமணிந்த பார்கவ குலத்தைச் சேர்ந்த நம்பூதிரிகளின் குடும்பத்தால் கைப்பற்றப்பட்டது.

    பூஞ்சார் பாண்டிய வம்சம்

    1700களில் குருவாயூர் அருகே உள்ள வெங்கிடங்குவில் இருந்து தமிழ் பூஞ்சார் பாண்டியன் வம்சத்திற்குப் பதிலாக சார்க்கரா கோவிலகம் என்ற துளு பிராமண போற்றி குடும்பம் வந்தது. பாண்டிமண்டலம் உடைய குலசேகரப் பெருமாள் என்ற திருநாமத்துடன் துளு பிராமண வம்சத்தினர் பூஞ்சாரை ஆண்டனர்.

    பிராமண பந்தளம் மற்றும் பூஞ்சார் வம்சங்கள் இரண்டும் தாய்வழி வம்சாவளியைக் கடைப்பிடித்தன.

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் வம்சத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் குலங்களால் ஆதரிக்கப்பட்டனர்.

    பாண்டிய வம்சத்திற்குப் பின் வந்த ஆரிய நம்பூதிரி பாண்டியர்கள் அஹிச்சத்திரத்திலிருந்து குடிபெயர்ந்த நேபாள வேர்களைக் கொண்ட துளு பிராமணர்கள் ஆவர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து நம்பூதிரி பாண்டியர்கள் காலத்தில் சீரப்பஞ்சிற பணிக்கர்களும் மலை அரையர்களும் சபரிமலை கோயிலில் தங்களின் முதன்மையான இடத்தை இழந்தனர். பக்தர்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டனர்.

    ReplyDelete
  50. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    வாவர் பள்ளி

    அய்யப்பனின் நெருங்கிய நண்பரான வாவர் பாத்தும்மா - செய்தாலி தம்பதியரின் மகன். கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள எருமேலி நைனார் ஜும்மா மசூதிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த பள்ளிவாசல் வாவரின் மசூதியாக கருதப்படுகிறது. அவர்கள் மசூதியின் தொழுகை மண்டபத்திற்குள் நுழையாமல் மசூதியையும், ஓய்வெடுப்பதற்குரிய இடத்தையும் சுற்றி வருகின்றனர். இங்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபாடு செய்யவும், காணிக்கை, பிரசாதம் வழங்கவும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சபரிமலையில் வாவர்நடை என்று அழைக்கப்படும் மற்றொரு வழிபாட்டுத்தலம் உள்ளது, அங்கு வாவர் சிலை இல்லை, ஆனால் செதுக்கப்பட்ட கருங்கல் பலகை மற்றும் ஒரு பழைய வாள் மட்டுமே உள்ளன. வாவர் ஒரு முஸ்லிமாக இருந்ததால் ஒரு முஸ்லிம் மதகுரு தினசரி தொழுகை நடத்துகிறார். இங்கும் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சந்தனக்கூடம் திருவிழா பேட்டத்துள்ளல் எனப்படும் சடங்கு நடனத்தின் முன்னோடியாக நடத்தப்படுகிறது. எருமேலி நைனார் ஜும்மா மஸ்ஜித் 1970 களில் கோபாலகிருஷ்ணன் என்ற இந்து கட்டிடக் கலைஞரால் மீண்டும் கட்டப்பட்டது.

    மணிகண்டன்

    மணிகண்டன் மலை அரையர் குலத்தைச் சேர்ந்தவர். கரிமலை அரையன் கந்தன் மற்றும் அவரது மனைவி கருத்தம்மா ஆகியோரின் மகன் மணிகண்டன் என்று மலை அரையர்கள் கூறுகின்றனர். மணிகண்டன் பாண்டிய மன்னன் 1610 களில் கொள்ளையர்களிடமிருந்து வந்தபோது அவரைப் பாதுகாத்தார். மணிகண்டன் பாண்டிய இளவரசி மாயாவதியை உதயணனிடம் இருந்து மீட்டார். மலை அரையர்கள் மணிகண்டனுக்கு சன்னதி அமைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் அய்யப்பன் மணிகண்டனின் அவதாரமாகக் கருதப்பட்டு, மலை அரையர்களால் வழிபடப்பட்டார்.

    கி.பி 1623 வாக்கில் பல்வேறு இனத்தவர்களின் உதவியோடு உதயணனை மணிகண்டன் தோற்கடித்தார். மணிகண்டன் தலைமையிலான படைகள் பாண்டிப்படை, ஆலங்காட்டுப்படை, அம்பலபுழப்படை, சீரப்பஞ்சிறப்படை, மல்லன், வில்லன், வலியக்கடுத்தா, கொச்சுகடிதா, வாவர், நஸ்ரானிகள், அர்த்துங்கல் வெளுத்தச்சன் என்ற ஜாகோமோ ஃபெனிசியோ என்ற ஒரு இத்தாலிய ஜெசுயிட் பாதிரியார் போன்றவர்கள்.

    வலிய கடுத்த ஸ்வாமி

    அய்யப்பனின் உதவியாளரான வலிய கடுத்த ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய சன்னதி புனித படிகளின் இடது பக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது. வலிய கடுத்தா ஒரு மலை அரையர் பழங்குடித் தலைவர் ஆவார், அவர் நாயக்கர் இராணுவத்திற்கு எதிராக மலை அரையர் படைகளை வழிநடத்தினார்.

    மலை அரையர்

    மலை அரையர், சேர வம்சத்தை ஆதரித்த மூன்று பெரிய வில்லவர் பழங்குடியினரில் ஒன்றான மலையர் குலத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம். ஐயப்பனின் முக்கிய ஆதரவாளர்களாக இருந்த மலை அரையர் 1904 ஆம் ஆண்டு வரை ஐயப்பன் கோவிலின் பூசாரிகளாகவும் உரிமையாளராகவும் இருந்தனர். இருபதாம் நூற்றாண்டு வரை ஒத்திசைவான நம்பிக்கை மற்றும் மத சகிப்புத்தன்மை நிலைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

    1800களில் பந்தளம் நம்பூதிரி பாண்டிய மன்னர்களால் மலை அரையர்கள் தங்கள் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர். சபரிமலை மற்றும் சபரிமலையைச் சுற்றியுள்ள பதினேழு மலைகளிலிருந்து மலை அரையர்கள் வெளியேற்றப்பட்டனர்.

    மலை அரையர்கள் கூலியின்றி ஏலக்காயை மலைகளில் இருந்து சமவெளிக்கு கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். கி.பி 1856 இல் மலை அரையர்கள் நாயர் அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்து தாக்கினர்.

    மலை அரையர்களின் கிறிஸ்துவ மதமாற்றம்

    மலை அரையர்களை துன்புறுத்தியது பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வழிவகுத்தது. மலை அரையர்களில் பாதி பேர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். ஸிஎம்எஸ் மிஷனரி தந்தை ஹென்றி பேக்கர் 1840 முதல் 1862 வரை அவர்களிடையே பணியாற்றினார். தந்தை.ஹென்றி பேக்கர், ஹில் அரியன்ஸ் ஆஃப் திருவாங்கூர் என்ற புத்தகத்தை எழுதினார்.1879 இல் மலை அரையர்களில் சுமார் 2000 கிறிஸ்தவர்கள் இருந்தனர்.

    திராவிடப் பாணி வழிபாடு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கி.பி.1904 வரை திராவிட வழிபாட்டு முறைகளை மலை அரையர் பூசாரிகள் நடத்தி வந்தனர். அவர்களின் முக்கிய வழிபாடு தேன் மற்றும் நெய் கொண்டு அபிஷேகம். சமீப காலம் வரை மலை அரையர்களின் "தேனாபிஷேகம்" வழிபாடு அனுமதிக்கப்பட்டது. சில தசாப்தங்களுக்கு முன், தந்திரிகள் இந்த வழிபாட்டை நிறுத்தினர்.

    ReplyDelete
  51. அர்த்துங்கல் வெளுத்தச்சன் மற்றும் சுவாமி ஐயப்பன்

    1904ல் கட்டப்பட்ட புதிய சபரிமலை கோவில்

    சபரிமலை கோயில் போளச்சிறக்கல் கொச்சும்மன் முதலாளி என்ற கிறிஸ்தவ கட்டிட ஒப்பந்ததாரரால் கட்டப்பட்டது. மலை அரையர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சபரிமலை கோவில் கி.பி.1900ல் மர்மமான முறையில் தீயில் எரிந்து நாசமானது.
    சபரிமலை கோவிலை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை திருவிதாங்கூர் அரசரிடம் இருந்து கொச்சும்மன் முதலாளி கி.பி.1900ல் பெற்றார்.
    கி.பி.1904ல் கொல்லத்தில் கட்டுமானப் பணி தொடங்கியது. அஷ்டமுடிக் காயல் கரையில் மரம் மற்றும் கல் பாகங்களைக் கொண்டு கோயில் அமைக்கப்பட்டு, பின்னர் சபரிமலைக்கு மாற்றப்பட்டது. கொச்சும்மன் முதலாலி 1907 இல் இறந்தாலும், சிரியன் ஆர்த்தடாக்ஸ் பாதிரியாராக இருந்த அவரது மருமகன் ஸ்கரியா கத்தனார் சபரிமலை கோயிலின் கட்டுமானப் பணிகளை முடித்தார்.

    தாழமண் மடம் தந்திரி குடும்பம்

    1904 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கு பிராமணர்களின் ஒரு குடும்பத்தை அர்ச்சகர்களாக நியமித்தார், அவர்கள் செங்கன்னூரில் குடியேறினர். தாழமண் மடம் தந்திரி குடும்பம் என்று அழைக்கப்படும் இந்த குடும்பம் கி.பி 1904 முதல் சபரிமலையில் அர்ச்சகராக இருக்க பரம்பரை உரிமை பெற்றுள்ளது.
    சுதந்திரத்திற்குப் பிறகும் சபரிமலையில் தந்திரிகளாக வேறு எந்த அர்ச்சகர் குடும்பமும் அனுமதிக்கப்படவில்லை.

    பிராமண மேலாதிக்கம்

    இந்தக் காலகட்டத்திற்குப் பிறகு மலை அரையர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சீரப்பஞ்சிற பணிக்கர்கள் புறக்கணிக்கப்பட்டனர். சபரிமலை கோயில் முற்றிலும் நம்பூதிரி பாண்டியர்கள் மற்றும் தெலுங்கு பிராமணர்களாகிய தாழமண் மடம் தந்திரி குடும்பத்தின் கீழ் வந்தது. சபரிமலை கோவிலின் தந்திரி பதவி கி.மு 100ல் பரசுராம மகரிஷியில் இருந்து தங்களுக்கு கிடைத்ததாக தாழமண் மடம் தந்திரிகள் இப்போது கூறுகிறார்கள்.

    அதாவது ஐயப்பன் பிறப்பதற்கு 1700 ஆண்டுகளுக்கு முன்பே தாழமண் தந்திரிகள் சபரிமலை கோவிலின் பூசாரிகளாக இருந்தனர் என்பதாகும்.

    பாண்டிய வம்சத்தின் திராவிட வேர்கள்

    அசல் பாண்டியர்கள் திராவிட தமிழ் வில்லவர் ஆட்சியாளர்கள். வில்லவர் மன்னர்களை வில்லவர், மலையர், வானவர் மற்றும் மீனவர் குலங்கள் ஆதரித்தன. பணிக்கர்களும் ஏனாதி தளபதிகளும் பாண்டியப் படைகளை வழிநடத்தினர்.

    பாண்டியர்கள் வேடம் போடும் பார்கவகுலத்தைச் சேர்ந்த நம்பூதிரி பாண்டிய வம்சத்தினர் திராவிட வில்லவர்களோ தமிழர்களோ அல்ல. நம்பூதிரி பாண்டியர்கள் இன ரீதியாக பந்தளம் பாண்டிய வம்சத்துடன் தொடர்புடையவர்கள் அல்ல.

    துளு-நேபாளிய படையெடுப்பாளர்கள்

    தமிழ் வில்லவர்கள் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து கேரளா மற்றும் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சங்களை நிறுவினர். தமிழ் அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு மன்னர்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டு வைத்தனர்.12 ஆம் நூற்றாண்டில் பெரும் கடல் சக்தியாக இருந்த அரேபியர்கள் மலபாரில் ஒரு பெரிய குடியேற்றத்தை நிறுவ விரும்பினர்.

    துளு மன்னர்கள் அஹிச்சத்திரத்தில் இருந்து வேர்களைக் கொண்ட நேபாள நாயர்களின் இராணுவத்தால் பாதுகாக்கப்பட்டனர். நம்பூதிரிகளும் அஹிச்சத்திரத்தில் வேர்களைக் கொண்ட துளு பிராமணர் ஆவர், அவர்கள் கிபி 345 இல் கடம்ப மன்னர் மயூர வர்மாவின் ஆட்சியின் போது கர்நாடகாவிற்கு குடிபெயர்ந்தனர்.

    கி.பி 1120 இல் பாணப்பெருமாள் (பானுவிக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு படையெடுப்பாளர் அரேபிய ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். பாணப்பெருமாள் 350000 எண்ணிக்கையிலான நாயர் படையுடன் கேரளா மீது படையெடுத்து மலபாரை (காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்கள்) ஆக்கிரமித்தார், அங்கு அரேபியர்கள் குடியேறினர்.

    கி.பி 1120 துளு படையெடுப்பிற்குப் பிறகு, நேபாள வம்சாவளியைக் கொண்ட நாயர்களும் நம்பூதிரிகளும் வடக்கு கேரளாவில் தோன்றினர். பல நாயர்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டிருந்தனர், ஆனால் அவர்கள் நேபாள வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மஞ்சள் நிறத்தின் சாயையும் மற்றும் சற்று மங்கோலிய முக அம்சங்களுடனும் இருந்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் தங்களைச் சவர்ணர் என்று அழைத்தனர். நாயர்களும் நம்பூதிரிகளும் சேர மற்றும் பாண்டிய அரசுகளின் எதிரிகளாக இருந்த துளு-நேபாள மக்கள்.

    ReplyDelete
  52. பல்லவர் தமிழர் அல்லர்

    வன்னியர்கள்

    பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது.

    பள்ளிபாணப்பெருமாள்

    துளுநாட்டின் ஆலுபா பாண்டிய வம்சத்தின் பாணவாணிப்பெருமாள்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினர். கி.பி 1120 இல் அராபியர்களுடன் ஆதரவுடன் கேரளா மீது படையெடுத்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளும் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினார். பள்ளிபாணப்பெருமாள் என்று அழைக்கப்பட்ட இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். பௌத்த பாணர்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தியிருக்கலாம். பாணப்பெருமாளின் வழித்தோன்றல்கள் கண்ணூர் கோலத்திரி வம்சத்தினர். கோலத்திரி மன்னர்களும் பள்ளிப் பட்டத்தைப் பயன்படுத்தினர். பேப்பூரில் உள்ள பள்ளி கோவிலகத்தின் கிளையானது ஒரு குட்டித் தலைவரால் ஆளப்பட்ட தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்பட்டது. தலைச்சேரி தொழிற்சாலையில் இருந்த பிரிட்டிஷ் தலைமை ஆடம்ஸ் பேப்பூரில் இருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அழைத்து வந்து திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் அரசர்களாக்கினார். கேரளாவை ஆண்ட துளு
    ஆலுபா வம்சம், பள்ளி என்று அழைக்கப்பட்டாலும், வன்னியர்களுடன் எந்த விதத்திலும் இனம் சார்ந்திருக்கவில்லை. பள்ளி பட்டம் பௌத்த பாண மன்னர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

    பாண குலம்

    பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    பாணர்கள் காடுகளில் (வன்னி, சம்பு, காடு) வசிக்க விரும்பினர். பாஞ்சால நாட்டில் ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

    பாஞ்சால நாடு

    கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் அதாவது மகாபாரத காலத்தில் வன்னியர்கள் பாஞ்சால நாட்டில் வசிப்பவர்களாக இருந்தனர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வன்னியர்கள் பஹ்லவா-பல்லவ என்று அழைக்கப்படும் பாரசீக கலப்பு பாரத்வாஜ பிராமண மன்னர்களுடன் தென்னிந்தியாவிற்கு படையெடுத்து வந்தனர்.

    பெங்களூர் கரகா

    கர்நாடகாவில், ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்கள் தர்மராயா கோவிலில் "பெங்களூர் கரகா" என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் நடத்தப்படும் திருவிழாவில், பாஞ்சால நாட்டின் திரௌபதியின் விசுவாசமான ஊழியர்களான வீர புத்திரர்களின் வேஷத்தில் திகளர் என்றழைக்கப்படும் வன்னியர்கள் வாள்களுடன் நடனமாடுகிறார்கள்.

    வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்னும் பட்டமுடைய வன்னியர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்து பாஞ்சால நாட்டில் வசித்தவர்கள்.

    கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

    ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

    இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

    பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா, பள்ளி, திர்காலா) படைகளைக் கொண்டு வந்தனர்.

    ReplyDelete

Ads

Ads