அஹிம்சை பற்றி தேவர்

thevar images -mukkulathormedia



அஹிம்சையை ஆயுதமாகக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறோம்,
அஹிம்சாவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களின்
வாழ்க்கையும் ,நிர்வாகமும் எப்படி இருக்கிறது ?


போலீஸ் ஸ்டேஷன்களை ஏன் ஏராளமான அளவுக்கு பெருக்க வேண்டும் ?

அஹிம்சையில் நமக்கு நம்பிக்கை இருக்குமானால் ,
முந்தி இருந்த போலீஸ் ஸ்டேஷன்களே போதாதா ?

துப்பாக்கிப் பிரயோகங்களை அதிகமாகக் கையாளவேண்டிய அவசியந்தான் என்ன ?

முந்தையநாளில் கூட ஜெயிலில் உள்ள கைதிகளை துப்பாக்கியால் சுட்டது கிடையாது ,
ஆனால் அஹிம்சையின் பேரால் ஜெயிலில் உள்ள கைதிகளின் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள் .

இது சர்க்கார் கையாளுகிற அனுபவம் .

ராணுவ பலத்தை அதிகப் படுத்திக் கொள்ளாமல் ,

உள்நாட்டு ஜனங்கள் கொந்தளிப்பை அடக்குவதற்கு ,
போலீஸ் ஸ்டேஷன்களை மாத்திரம் மேலும் மேலும்
அதிகப் படுத்திக் கொண்டே போவது ,
அஹிம்சையின் பேரால் செய்யும் தவறு .

உண்மையில் அஹிம்சைத் தத்துவத்தில் ஒன்றுமில்லை என்பதையே இது காட்டுகிறது !


பகிர்தல் :விக்னேஷ் [ Vignesh Tuticorin ]

No comments:

Post a Comment

Ads

Ads